பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்561

கருவினால் கலங்க, தெண் அம் கயம் கெட, தெளிவு அற்று அன்ன,
செருவினால் கலங்க, உள்ளம் தெளிவு அற, பங்கம் ஆம் என்று,
உருவினால் கலங்கத் தோன்றி உடன்ற பேய், உளத்தில் அன்னார்
வெருவினால் கலங்க, தம்முள் விளைத்தன அரும் போர் அன்றே.

     நடுவிடத்தோடு கலங்கவே, தெளிந்த அழகிய குளமும் கெட்டு,
அதன் நீர் தெளிவற்றுப் போவது போல, போரினால் கலங்கவே,
உள்ளம் தெளிவற்று, பாவம் விளையுமென்று கருதி, தம் உருவத்தைக்
கண்டு கலங்குமாறு தோன்றிப் போரிட்டுப் பார்த்த பேய்கள், பின்,
அவ்விருவரும் தம் உள்ளத்தில் அச்சத்தால் கலங்குமாறு, தமக்குள்ளே
அரிய போர் விளைவிக்க முற்பட்டன.

     'அன்றே' அசை நிலை.

                பேய்களின் மாயப்போர்

     - மாங்கனி, கூவிளம், கூவிளங்காய், - மாங்கனி, கூவிளம்,
கூவிளங்காய்.

                   24
கடமாறில வெஞ்சின வேழமொடுங் கனமீருகொ டிஞ்சிவி
                                     மானமொடு
மிடமாறியு கண்டன வாசியொடும் மெரியூறிய வெங்கத
                                     மார்விழியால்
விடமாறில வெஞ்சிலை யாதியொடும் விளைபோருரி
                              வாள்வளை வேல்கவருந்
தடமாறில வண்கர வீரரொடுஞ் சலராசியி றோன்றிய
                                     தோர்படையே.