|
மேம்பட்டவனாகிய
சூசை புகழ் கொண்டு அமைந்த வேத நூல்
விதியை எடுத்துச் சொல்லி முடித்தான்.
வயா
- வருத்தம். தீஉறீஇ - சொல்லிசை அளபெடை.
கேட்டோர்
உணர்வு
| 122 |
வீண்டா ரேறுட்
பட்டென வன்னான் விரிநன்னூற்
கொண்டா ரன்னார் கொண்டவை யுள்ளிக் குழைகின்றார்
கண்டா ரென்னாக் கண்கள்பு தைத்தார் கலுழ்கின்றார்
மண்டார் வேட்கைத் தீயற விஃதே வழியென்பார். |
| |
விண்டு ஆர் ஏறு
உட்பட்டு என அன்னான் விரி நல்நூல்
கொண்டார் அன்னார்; கொண்டவை உள்ளிக் குழைகின்றார்;
கண்டார் என்னாக் கண்கள் புதைத்தார் கலுழ்கின்றார்;
"மண்டு ஆர் வேட்கைத் தீ அற இஃதே வழி" என்பார். |
மேகத்திலிருந்து இழிந்த இடி உள்ளத்தில் பட்டாற்போல அச்சூசை
விரித்து உரைத்த நல்ல வேத நூலைச் சூழ நின்ற அவர்கள் மனத்துட்
கொண்டனர்; கொண்டவற்றை நினைந்து குழைகின்றனர்; நரகத்தையே நேரிற் கண்டவர்போலக்
கண்களைக் கையால் புதைத்துக் கொண்டு அழுகின்றனர்;
"மண்டிப் பெருகுகின்ற ஆசைத் தீ அறுவதற்கு இந் நரக நினைவே வழி"
என்று சொல்லுவர்.
நிகழ்
கால எதிர்கால வினைமுற்றுக்களையும் தெளிவுபற்றி இறந்த
காலமாகவே கொள்க.
| 123 |
இன்பாற்
கொண்ட பாவமி யற்று மியல்பிஃதேற்
றுன்பாற் கொண்ட நோன்பினி தென்பார் துகள்மல்கிப்
பின்பாற் கொண்ட வாகுல மெண்ணார் பிறழாதோ
ரன்பாற் கொண்ட தீதினி தென்பா ரதுவென்பார். |
| |
"இன்பால் கொண்ட
பாவம் இயற்றும் இயல்பு இஃதேல்,
துன்பால் கொண்ட நோன்பு இனிது" என்பார்; "துகள் மல்கிப்
பின்பால் கொண்ட ஆகுலம் எண்ணார் பிறழாது, ஓர்
அன்பால் கொண்ட தீது இனிது என்பார் அது" என்பார். |
|