|
"வாமன்
தன்னை யானையாகவும், தன் பாவச் சார்பை யானையின்
மதமாகவும் உருவகித்துப் பேசுகிறான்.
| 132 |
உள்ளுறத்
தெளிநூ லாற்கீ
ழுலகமே
சுடுந்தீ யென்றா
யள்ளுறக் காமத் தீயை
யவித்ததண்
பொய்கை யன்றோ
வள்ளுறப் புகைமொய்த் தங்கண்
மண்டிருள்
தவழு மென்றாய்
தெள்ளுறக் கண்முன் னிட்ட
திருவிளக்
காயிற் றன்றோ. |
| |
"உள் உறத் தெளி
நூலால், கீழ் உலகமே சுடும் தீ என்றாய்;
அள் உறக் காமத் தீயை அவித்த தண் பொய்கை அன்றோ?
வள் உறப் புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய்;
தெள் உறக் கண்முன் இட்ட திருவிளக்கு ஆயிற்று அன்றோ? |
"நீ
உன் உள்ளத்தில் பொருந்தத் தெளிந்த வேதநூல் அறிவால்,
கீழுலகமாகிய நரகமே சுடும் தீ என்று சொன்னாய், தீயா அது? அள்ளிக்
கொண்ட தன்மையாய்க் காமத்தீயை அவித்த குளிர்ந்த தடாகம் அல்லவா
அது? அங்கே வளமாகப் புகைமொய்த்து மண்டிய இருள் தவழும் என்று
சொன்னாய்; அதுவே தெளிவு பெறக் கண்முன் இட்டு வைத்த திருவிளக்கே
ஆயிற்று அன்றோ?
| 133 |
சுழல்தரப்
புகைக ணாறுந்
தூய்மலர்த்
தவிசி றேம்பூ
நிழல்தரத் தொடலைக் கூந்த
னீர்மையார்
தோண்மேற் றுஞ்சி
யழல்தரக் கனன்ற மஞ்சத்
தழன்றழன்
றூழி காலம்
புழல்தரப் புண்பட் டங்கம்
பொடிபட
லினிதோ நெஞ்சே. |
|