| 135 |
தீய்த்திர
டளிர்த்த நோயாற்
றீயவர்
புலம்பு மோதை
பேய்த்திர டளிர்த்த வோதை
பிளந்தகா
துணலின் பென்றோ
வீய்த்திர டளிர்த்த தேன்போல்
விளம்பிய
சொல்லென் றெண்ணிப்
போய்த்திர டளிர்த்த பொய்யிற்
போழ்ந்தவாய்
விழைத்தாய் நெஞ்சே. |
| |
"தீய்த் திரள்
தளிர்த்த நோயால் தீயவர் புலம்பும் ஓதை
பேய்த் திரள் தளிர்த்த ஓதை பிளந்த காது உணல் இன்பு என்றோ,
வீய்த் திரள் தளிர்த்த தேன் போல் விளம்பிய சொல் என்று எண்ணிப்
போய், திரள் தளிர்த்த பொய்யின் போழ்ந்த வாய் விழைந்தாய், நெஞ்சே?
|
"நெஞ்சே,
பேய்க் கூட்டத்தினின்று பிறந்த ஓசையால் பிளந்த காது
தீத்திரளினின்று பிறந்த துன்பத்தால் தீயவர் நரகத்தில் புலம்பும் ஓசையையும்
சேர்த்து உண்ணுதல் இன்பம் என்று கருதியோ, மலர்த்திரளில் பிறந்த
தேன்போல் விலைமகளிர் சொல்லிய சொல் இனியது என்று எண்ணிப்
போய், திரளாகப் பிறந்த பொய்யினால் பிளந்த அவர்தம் வாயை
விரும்பினாய்?
தீய்,
வீய் என்பன எதுகைப் பொருட்டு யகரம் பெற்றன.
| 136 |
அலைவிர வூழல்
வைகி
யரவினஞ்
சயின்றெஞ் ஞான்றுங்
கொலைவிர வூழிச் செந்தீக்
குளித்தலே
யினிய தென்றோ
வலைவிர வணியிற் பின்னி
மலர்தவழ்
கூந்தல் வெஃகிப்
புலைவிர வுணர்ந்த காமப்
புணரியிற்
குளித்தாய் நெஞ்சே. |
|