|
கேட்டோர்
உணர்ச்சி
-
விளம், கூவிளங்காய்
| 141 |
என்னவி யம்பினகா
லுன்னரு மின்பமுறீஇத்
துன்னவர் சூழ்மகிழும்
பன்னரும் பான்மையதே. |
| |
என்ன இயம்பின
கால்,
உன்ன அரும் இன்பம் உறீஇத்
துன்னு அவர் சூழ் மகிழும்
பன்ன அரும் பான்மையதே. |
இவ்வாறெல்லாம்
வாமன் சொல்லிய போது, நினைத்தற்கரிய இன்பம்
அடைந்து சுற்றிலும் கூடியிருந்தவர் கொண்ட மகிழ்ச்சியும் சொல்லுவதற்கு
அரிய தன்மையதாம்.
அவர்
சொல்லியவை மேல் தொடர்ந்து வருகின்றன, உன்னரும்,
பன்னரும் என வந்தன தொகுத்தல் விகாரம்.
| 142 |
இனையவி யற்றியநூ
லனையவெ மக்களவோ
வனையவ ருஞ்சுடரைப்
புனையவோர் பூணுளதோ. |
| |
"இனைய இயற்றிய
நூல்
அனைய எமக்கு அளவோ?
வனைய வரும் சுடரைப்
புனைய ஓர் பூண் உளதோ? |
"இத்தகைய
மாற்றத்தை ஏற்படுத்திய வேத நூலை அத்தகையது என்று
ஒப்பிடுதல் எமது சிற்றறிவின் அளவுக்கு அடங்குவதோ? எல்லாவற்றையும்
அழகு செய்ய வரும் பகலவனை அழகு செய்ய ஓர் அணிகலன் உண்டோ?
|