பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 373

      143
ஐவழி யாசுதரும்
பொய்வழி போக்கியற
மெய்வழி மேவிநர
குய்வழி யொன்றுளதே.
 
"ஐ வழி ஆசு தரும்
பொய் வழி போக்கி,
அற மெய் வழி மேவி, நரகு
உய் வழி ஒன்று உளதே.

     "ஐம்புலன்களின் வழியாகப் பாவத்தைத் தரும் பொய்யான வழியைப்
போக்கி, அறம் என்னும் மெய்வழியை விரும்பி, அதன் மூலம் நரகத்திற்குத்
தப்பி உய்யும் வழியாக வேத நூல் ஒன்றே உளது.

 
      144
காதல லாதுகடுஞ்
சாதலி லாதுதகு
மோதலொ ளித்துநர
காதலும் வித்ததுவே.
 
"காதல் அலாது கடுஞ்
சாதல் இலாது; தகும்
ஓதல் ஒளித்து, நரகு
ஆதலும் வித்து அதுவே.

     "ஆசையே அல்லாமல், கொடுமையான சாவு வேறு ஒன்றும் இல்லை;
தகுதியான உபதேசத்தை மறைத்து, நரகம் சேர்தற்கும் அதுவே வித்து
ஆகும்.

     'இலது' என்ற சொல் நீட்டல் விகாரம் பெற்றது.

 
            145
இறந்தனர் வேகுமெரி
பிறந்தன ரோர்ந்துபெறிற்
றுறந்தனர் துஞ்சுளிவான்
சிறந்தனர் சீர்த்துவப்பார்.