இறந்தனர்
வேகும் எரி
பிறந்தனர் ஓர்ந்து பெறின்,
துறந்தனர், துஞ்சு உளி வான்
சிறந்தனர் சீர்த்து உவப்பார்."
|
"பாவிகளாய்
இறந்தோர் வேகும் நரக நெருப்பை மனிதராய்ப்
பிறந்தோர் நினைந்து பெற்றுக் கொள்வாராயின், மேற்கூறிய ஆசையைத்
துறந்தவராய், இறக்கும்போது வான் வீட்டில் சிறந்தவராய்ப் பெருமை பெற்று
மகிழ்வர்."
| 146 |
என்றன ரென்றெவருங்
கன்றினர் காட்சியுறீஇ
நின்றனர் வீட்டுநெறி
சென்றனர் சீர்பெறவே. |
| |
என்றனர்; என்று
எவரும்
கன்றினர்; காட்சி உறீஇ
நின்றனர்; வீட்டு நெறி
சென்றனர் சீர் பெறவே. |
என்றெல்லாம்
சூழ நின்று கேட்டோர் கூறினர்; கூறி எல்லோரும் தம்
பாவங்களை எண்ணி வருந்தினர்; அறிவுக் காட்சி பெற்று நின்றனர்; சிறப்புப்
பெறுமாறு வீடு பெறுவதற்கான நெறியில் நடந்தனர்.
| 147 |
அள்ளிய வாமனரி
லெள்ளிய யாவருமே
தெள்ளிய சீரிறுதி
யுள்ளியன் றோதினரால். |
| |
|
அள்ளிய வாமன்
அரில்
எள்ளிய யாவருமே
தெள்ளிய சீர் இறுதி
உள்ளி அன்று ஓதினர் ஆல்.
|
அள்ளிக்
கொண்டது போன்ற வாமனின் குற்றங்களைப் பற்றி முன்
அவனை இகழ்ந்த யாவரும் இறுதியில் அவன் தெளிவு கொண்ட சிறப்பைக்
கருதி அன்று அவனைப் புகழ்ந்தனர்.
|