திருக்குடும்பத்தினர்
எசித்து நாட்டினின்று சூதேய நாட்டிற்கு
மீண்டதைக் கூறும் பகுதி.
மீளுதற்கு
ஆணை
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
1 |
ஏழ்பட வருட
மிவ்வா
றியல்பட
வொழுகிற் றாகிப்
போழ்படக் கல்லுஞ் செந்தீப்
புழுங்கிய
வனம்போற் பாவத்
தாழ்பட வழன்ற வந்நா
டாரண
வருவி பாயக்
கேழ்பட மலர்ந்த சோலைக்
கிழமையி
னெழுவிற் றன்றோ. |
|
ஏழ்பட வருடம்
இவ்வாறு இயல் பட ஒழுகிற்று ஆகி,
போழ் படக் கல்லும் செந்தீப் புழுங்கிய வனம் போல், பாவத்து
ஆழ் பட அழன்ற அந்நாடு, ஆரண அருவி பாய,
கேழ் பட மலர்ந்த சோலைக் கிழமையின் எழுவிற்று அன்றோ. |
இவ்வாறு
ஏழு ஆண்டுகள் நலத்தோடு நடந்து முடிந்தன.
அக்காலமெல்லாம், கல்லும் பிளக்கச் செந்தீயினால் கொதித்த வனம் போல்,
பாவத்தில் ஆழ்ந்து கிடந்து வெம்பிய அவ்வெசித்து நாடு, வேதம் என்னும்
அருவி பாய்தலால், நிறமுள்ள பூக்கள் மலர்ந்த பொழிலின் தன்மையாய்
எழுச்சி பெற்றது.
|