உதிக்கும் ஒரு பிள்ளையின்
அருளால் உனக்கு ஒளி தழைக்க, நீ இன்று
கண்டதெல்லாம் அவனே முடித்து வைப்பான்' என்று இறைவன் அன்றே
அவனுக்குச் சொன்னான்.
12 |
அன்ன பிள்ளைநா
னன்ன வேணியுநா
னின்ன நகரிடை யிறக்கு மரந்தானே
சொன்ன முறையிலீ ருலகுந் தொடர்ந்தொன்றாய்
மன்ன மகிழ்வுற மாள்வே னானென்றான். |
|
"அன்ன பிள்ளை
நான்; அன்ன ஏணியும் நான்
இன்ன நகரிடை இறக்கும் மரம் தானே;
சொன்ன முறையில், ஈர் உலகும் தொடர்ந்து ஒன்றாய்
மன்ன, மகிழ்வு உற மாள்வேன் நான்" என்றான். |
"அத்தகைய
பிள்ளை நானே; அத்தகைய ஏணியும் நான் இந்த
நகரத்தில் இறக்கப் போகும் சிலுவை மரமே ஆகும்; இவ்வாறு, முன்
யாக்கோபுக்குச் சொன்ன முறைப்படி, மண்ணும் விண்ணுமாகிய இரண்டு
உலகங்களும் தொடர்ந்து ஒன்றாய் நிலை பெறுமாறு, நான் அம்மரத்தில்
மகிழ்ச்சியோடு இறப்பேன்" என்றான்.
13 |
வேனேர் நுழைந்தசொல்
விளைத்த புண்ணிடுநீர்
போனே ரிலவயர்ந் திருவர் புலம்பியழத்
தேனேர் மலரெனச் சிறுவ னகைத்துலகம்
வானேர் மகிழ்வதா காதோ வளர்ந்தென்றான். |
|
வேல் நேர்
நுழைந்த சொல் விளைத்த புண் இடு நீர்
போல், நேர் இல அயர்ந்து இருவர் புலம்பி அழ,
தேன் நேர் மலர் எனச் சிறுவன் நகைத்து, "உலகம்
வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து?" என்றான்.
|
வேலுக்கு
நிகராகத் தம் காதுள் நுழைந்த இச்சொல் விளைவித்த
புண்ணினின்று பொழியும் இரத்தம் போல, அவ்விருவரும் நிகரற்ற
தன்மையில் புலம்பி அழவும், சிறுவனாகிய குழந்தைநாதன்
தேன்பொருந்திய மலர்போல் புன்னகை காட்டி, "இம்மண்ணுலகம்
வானுலகிற்கு ஒப்பாக வளர்ந்து மகிழ்வது ஆகாதோ?" என்றான்.
|