செல் அகத்து
அனைத்திலும் சென்று தேடினார்;
தொல் அகத்து உறவினர்த் தொடர்ந்து நாடினார்;
வல் அகத்து உலகம் ஆள் மகவைக் காண்கிலார்!
கல் அகத்தாரும் உள் கலங்க விம்பினார்: |
திருமகன்
சென்றிருக்கக்கூடிய இல்லங்கள் அனைத்திலும் சென்று
தேடினர்; பழமை வாய்ந்த உறவினரிடமெல்லாம் தொடர்ந்து விசாரித்தனர்;
அதன் பின்னும், வலிமை வாய்ந்த மனத்தோடு உலகங்களை யெல்லாம்
ஆளும் மகனைக் காண இயலாதவராய், கல் மனம் படைத்தவரும் உள்ளம்
கலங்குமாறு விம்பி அழுதனர்:
21 |
தாயுநீ சேயுநீ
தவற் நாஞ்செயுந்
தீயுநீ பொறுப்பவன் சிறுவ வெம்விழி
பாயுநீ ருடனுயிர் பறிப்ப வோவிதோ
போயுநீ யறாத்துயர் புகுத்தி னாயென்பார். |
|
"தாயும் நீ;
சேயும் நீ; தவறி நாம் செயும்
தீயும் நீ பொறுப்பவன்; சிறுவ, எம் விழி
பாயும் நீருடன் உயிர் பறிப்பவோ, இதோ,
போயும் நீ அறாத் துயர் புகுத்தினாய்" என்பார்.
|
"எமக்குத்
தாயும் நீ; மகனும் நீ; தவறி நாங்கள் செய்யும்
தீமையையும் பொறுப்பவன் நீ; சிறுவனே, எங்கள் கண்ணினின்று
பாயும் கண்ணீரோடு எங்கள் உயிரைப் பறிக்கவென்றோ, இதோ, நீ
பிரிந்து போய், நீங்காத துயரத்தை எங்கள் மனத்தில் புகுத்தினாய்"
என்பர்.
22 |
எல்லையி
லெங்கணு மிருந்த டங்கிலோ
யொல்லையில் வரும்பொழு தொன்றி லோயெலாந்
தொல்லையி லறிந்துளோய் துதைந்த வெந்துயர்
வல்லையி லறாதெமை மறந்தி யோவென்பார். |
|
"எல்லை இல்
எங்கணும் இருந்து, அடங்கு இலோய்!
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய்! எலாம்
தொல்லையில் அறிந்து உளோய்! துதைந்த எம் துயர்
வல்லையில் அறாது, எமை மறந்தியோ?" என்பார். |
|