இயேசுநாதரின்
முன்னோடி எனப் போற்றப்படும் கருணையனின்
மாண்பு கூறும் பகுதி. மூல மொழியில் யோவான் எனவும், காரணக்
குறியால் நீராட்டி யோவான் (John the Baptist) எனவும், செந்தமிழில்
அருளப்பன் எனவும் வழங்கும் கருணையன் பிறப்போடு தொடர்புடைய
இதன் முற்பகுதி (1 - 49) 9-வது மகிழ்வினைப் படலத்திற்கும் 10-வது
மகவருள் படலத்திற்கும் இடையே வரத் தக்கது. திருக்குடும்பத்தினரின்
பரிவுள்ளத்தை ஒருங்கு விளக்கும் பயன் நோக்கி முனிவர் இதனை
இவ்விடத்து அமைந்துள்ளார் இப்படலத்து முற்பகுதிச் செய்திகள் லூக்கா
நற்செய்தி 1 : 5 - 24 36 - 66 காண்க.
கருணையன்
பெற்றோர்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
1 |
அல்லறத்
துளங்கு திங்க
ளணிந்தமீன்
பரப்புப் போலப்
பல்லறத் தொகுதி வாய்த்த
பணிபுனை
சக்க ரீய
னில்லறத் துணைவி குன்றத்
திணையகற்
பெலிச பெத்தை
சொல்லறத் துணையாய்த் தம்முட்
டுணைபுறத் தின்றி நின்றார். |
|
அல் அறத் துளங்கு
திங்கள் அணிந்த மீன் பரப்புப் போலப்
பல் அறத் தொகுதி வாய்த்த பணி புனை சக்கரீயன்;
இல்லறத் துணைவி குன்றத்து இணைய கற்பு எலிசபெத்தை
சொல் அறத் துணையாய், தம்முள் துணை புறத்து இன்றி நின்றார். |
இரவின்
இருள் கெடும்படி விளங்கும் சந்திரன் தன்னைச் சூழ
அணிந்துள்ள விண்மீன்களின் பரப்பைப் போல, பல வகை நல்லறங்களின்
தொகுதியைச் சிறந்த ஓர் அணிகலனாக அணிந்தவன் சக்கரீயன்.
அவனுடைய இல்லறத் துணைவி மலைக்கு நிகராக அசையாத கற்புள்ள
|