'மெய் வளர் வினை'
எனப்பட்டது. அதற்கு அமைந்து நடந்தலின், தேறியும்
துயரற்றும் ஓங்கியும் வாழ முடிந்தது. மை - மை போல் இருண்ட
அறியாமைக்கு ஆகு பெயர்.
3 |
பூட்சியின்
றுணையா மின்பப்
புதல்வரை
யின்றித் தூய்நல்
லாட்சியின் றுணையை தேடி
யருமறை
யுணர்ந்த வோதிக்
காட்சியின் றுணையோ டன்னார்
கனிந்துயர்ந்
தெவர்க்கு ஞானச்
சூட்சியின் றுணைதா மாகித்
துகடவிர்
புகழின் வாய்ந்தார். |
|
பூட்சியின் துணையாம்
இன்பப் புதல்வரை இன்றி, தூய்நல்
ஆட்சியின் துணையை தேடி, அரு மறை உணர்ந்த ஓதிக்
காட்சியின் துணையோடு அன்னார் கனிந்து, உயர்ந்து, எவர்க்கும்
ஞானச்
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார். |
அவர்கள்
உடலுக்குத் துணையாய் நின்று இன்பம் தரும் புதல்வர்
தமக்கு இல்லாமையால், தூய்மையான நல்லறத்தைக் கடைப்பிடித்தலே
தமக்குத் துணையென்று தேடினர்; அரிய வேகத்தைக் கற்றுணர்ந்த அறிவுக்
காட்சியின் துணையோடு எல்லோரிடத்தும் கனிவோடு பழகினர்;
ஒழுக்கத்தால் உயர்ந்து நின்றனர் யாவர்க்கும் ஞான ஆலோசனைக்குத்
தாமே துணையாய் அமைந்தனர். இவ்வாறு குற்றம் நீங்கிய புகழுக்கு
உரியவராயினர்.
ஆட்சி
- ஆளுதல்; கடைப்பிடித்தல். ஓதி - ஓதுதலாற் பெறும்
அறிவு. சூட்சி - சூழ்ச்சி என்பதின் போலி.
4 |
பரவலர் மலர்ந்த
சோலை
படர்ந்ததண் ணிழலோ டொத்தார்
கரவலர் மலர்ந்து நல்குங்
கனிந்ததே னெவர்க்கு மூட்டிப் |
|