பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 700

முப்பத்து நான்காவது
 

 
தூதுரைப் படலம்
 

     சூசை இறந்து, கடவுளின் தூதுவனாகச் சென்று, மீட்பை எதிர்
நோக்கிப் பாதலத்தில
் இருந்த புண்ணியவாளருக்குத் திருமகன் பிறப்பு
முதலிய செய்திகளை அறிவித்த விவரம் கூறும் பகுதி.

                    வானவர் பேணல்

     - விளம், - விளம், - மா, தேமா

 
             1
நீடிய பிணிகளெண் வருட நீங்கிலா
வாடிய வுடற்குயிர் வாடி லாவளர்ந்
தோடிய மீன்மிதித் துயர்ந்து வானலஞ்
சூடிய தன்மையிற் சூசை யாயினான்.
 
நீடிய பிணிகள் எண் வருடம் நீங்கு இலா,
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து,
ஓடிய மீன் மிதித்து உயர்ந்து, வான் நலம்
சூடிய தன்மையின் சூசை ஆயினான்.

     நீடித்த நோய்கள் எட்டாண்டுகளாக நீங்குதலின்றி, தன் வாடிய
உடலின் அளவிற்கு உயிர் வாடுதலின்றி வளர்ந்து, வானில் உலாவிய
விண்மீன்களை மிதித்துத் தாண்டி மேலே உயர்ந்துபோய், வானுலக
நலங்களை அணிந்த தன்மையாய்ச் சூசை விளங்கினான்.

 
              2
கட்புலங் கடந்துருக் கடிந்த வானவ
ருட்புலந் தகுந்தகத் தொத்த மாட்சியான்
மட்புலந் தணந்தினி யுரிய வாழ்வுற
விட்புலந் தணந்தனர் விளிப்ப வெய்தினார்.
 
கண் புலம் கடந்து உருக் கடிந்த வானவர்,
உள் புலம் தகுந்து, அகத்து ஒத்த மாட்சியான்,
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வு உற,
விண் புலம் தணந்தனர் விளிப்ப எய்தினார்.