"மண் புலம் தவிர்
நாம் களி மாந்திட,
கண் புலம் தவிர் தன் கவின் காட்ட, ஈங்கு
எண் புலம் தவிர் காந்தியோடு எய்திய,
விண் புலம் தவிர் விண்ணவனோ?" என்பார். |
பாதலத்தவர்
அவனைக் கண்டதும், "மண்ணுலகை விட்டு வந்த நாம்
இன்பம் நுகருமாறு, கண்ணாகிய பொறி கண்டறியாத தன் அழகை நமக்குக்
காட்டவென்று, எண்ணமென்னும், கருவியையும் கடந்த ஒளியோடு இங்கு
வந்தடைந்த, விண்ணுலகை நீங்கிய ஒரு வானவனோ இவன்?" என்பர்.
30 |
ஆதி யீறிலா
நாயக னம்புவி
மீதி லீறுயி ராகவி ளிந்தொரு
தீதி லாக்கதி வாயில்தி றந்தபின்
னேதி னாமடை மாட்சியி தோவென்பார். |
|
"ஆதி ஈறு இலா
நாயகன், அம் புவி
மீதில், ஈறு உயிர் ஆக, விளிந்து, ஒரு
தீது இலாக் கதி வாயில் திறந்த பின்,
ஏது இல் நாம் அடை மாட்சி இதோ?" என்பார்.
|
"தனக்குத்
தொடக்கமும் முடிவும் இல்லாத ஆண்டவன், தனது
உயிருக்கு இறுதி நேருமாறு அழகிய மண்ணுலகில் மடிந்து, ஒரு தீதும்
அணுக முடியாத மோட்ச வாயிலைத் திறந்து வைத்த பின், குற்றமில்லாத
நாம் அடையவிருக்கும் மாட்சி இத்தகையது தானோ?" என்பர்.
31
|
ஆயி னானுல
கத்தைய ளித்தபின்
றாயி னாரரு டாங்கிய தன்மையான்
மீயி னாங்கதி வீட்டெமைச் சேர்த்திடத்
தூயி னானடை தோற்றமி தோவென்பார். |
|
"ஆயினான் உலகத்தை
அளித்த பின்,
தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால்,
மீயின் ஆம் கதி வீட்டு எமைச் சேர்த்திட,
தூயினான் அடை தோற்றம் இதோ?" என்பார்.
|
|