"தீது ஒருங்கு
மலிபு அறியா, திளை அருள் ஆர் நெஞ்சத்தான்;
கோது ஒருங்கும் குறை ஒருங்கும் குறைத்து ஒழிக்கும் புயல் கரத்தான்;
நீது ஒருங்கும் தோற்றுவிக்கும் நெறி வழுவா அறப் பதத்தான்;
வாது ஒருங்கும் சிதைத்து அலகை வெல் நாம வயவேலான். |
"அவன்
தீமை முற்றிலும் தன்னிடம் பொருந்துதல் அறியாதவனாய்,
திரண்ட அருளே நிறைந்த நெஞ்சம் படைத்தவன். நாட்டின் குற்றங்களையும்
குறைகளையும் ஒருங்கே குறைத்து நீக்கும், மேகம் போன்ற அருட் கைகளை
உடையவன்; நீதியை எங்கும் ஒருங்கே தோற்றுவிக்கும், நெறி தவறாத அறம்
வாய்ந்த அடிகளை உடையவன்; வஞ்சனைகளை எங்கும் ஒருங்கே
சிதைத்துப் பேய்களை வெல்லும் அஞ்சத் தக்க வலிமை வாய்ந்த வேலை
உடையவன்.
43 |
அருள்விஞ்சிப்
பகைவெள்ள மறக்கடந்தான் மறையோதுந்
தெருள்விஞ்சிச் செயிர்ப்புகையா றேக்கியதீ திருட்கடந்தான்
பொருள்விஞ்சிப் பொங்குபுரைப் புணரியிரந் தவன்கடந்தான்
மருள்விஞ்சிப் பெருகுநசை மழுக்கடந்தான் றவமிக்கான் |
|
"அருள் விஞ்சி,
பகை வெள்ளம் அறக் கடந்தான்; மறை ஓதும்
தெருள் விஞ்சி, செயிர்ப் புகையால் தேக்கிய தீது இருள் கடந்தான்;
பொருள் விஞ்சிப் பொங்கு புரைப் புணரி, இரந்து அவன் கடந்தான்.
மருள் விஞ்சிப் பெருகு நசை மடுக் கடந்தான் தவம் மிக்கான்; |
"தான்
அருளில் மேலோங்கி நின்று, பகை வெள்ளத்தை முற்றிலும்
கடந்தான்; வேதத்தை எடுத்து ஓதும் தெளிவில் மேலோங்கி நின்று,
பாவமென்னும் புகையால் செறிந்து கிடந்த தீமையாகிய இருளைக் கடந்தான்;
செல்வ மிகுதியால் பொங்கும் பாவமாகிய கடலை, தான் இரந்தும்
வாழ்ந்ததன் மூலம் அவன் கடந்தான்; தவத்தில் மிக்கவனாகி, மயக்கம்
மேலோங்குவதனால் பெருகும் ஆசையென்னும் கடலைக் கடந்தான்.
|