12 |
வென்றியுங்
குணித்தனன் வென்றி வாளொடு
பின்றையு முளபல பெரும்ப டைக்கல
மின்றியும் பொறுத்தலோ டிகல்வெல் லப்பொறை
யொன்றையுந் தாங்கினா னுலகந் தாங்கினான். |
|
வென்றியும் குணித்தனன்;
வென்றி வாளொடு
பின்றையும் உள பல பெரும் படைக்கலம்
இன்றியும், பொறுத்தலோடு இகல் வெல்ல, பொறை
ஒன்றையும் தாங்கினான், உலகம் தாங்கினான். |
உலகங்களையெல்லாம்
தாங்கிக் கொண்டிருப்பவனாகிய அத்
திருமகன், தனக்கு வெற்றியையே கருதினான்; ஆயினும், வெற்றி
தருவதற்குரிய வாளோடு பின்னுமுள்ள பல பெரிய போர்க் கருவிகள்
இல்லாமலே, பொறுப்பதன் மூலம் பகையை வெல்வதற்குப் பொறுமை
ஒன்றையே கருவியாகத் தாங்கியுள்ளான்.
13 |
தீய்வரு மிகழ்ச்சியைச்
சிந்தி யாப்பிரான்
றாய்வரு மருளினாற் றரணி யெங்கணும்
போய்வருந் துயரறப் புதுமை யாக்கியுட்
காய்வருங் குளிர்ப்பவே கருணை காட்டுவான். |
|
தீய் வரும் இகழ்ச்சியைச்
சிந்தியாப் பிரான்,
தாய் வரும் அருளினால், தரணி எங்கணும்
போய், வரும் துயர் அறப் புதுமை ஆக்கி, உள்
காய் வரும் குளிர்ப்பவே கருணை காட்டுவான். |
நெருப்புப்
போல் தனக்கு வரும் இகழ்ச்சியையும் சிந்தியாத
அவ்வாண்டவன், தாய்க்குரிய கருணையால், உலகமெங்கும் சுற்றித் திரிந்து,
மக்களுக்கு வரும் துயரம் நீங்குமாறு புதுமைகள் புரிந்து, பகையால் உள்ளம்
கொதிப்பவரும் குளிர்ச்சியடையுமாறு தன் கருணையைக் காட்டுவான்.
14 |
கண்டருங்
கரந்தருஞ் செல்லக் காறரு
முண்டருங் களிதரு முயிர்த ருந்தகும்
பண்டருந் துயர்கணோய் பலவை தீர்தரு
மண்டருந் தயைநலம் வழங்கத் தந்துளான். |
|