பக்கம் எண் :

50இலக்கணக் கொத்து 

வினைகொண்டு முடித்து, பின்பு செய்யான் என்னும் மறையை வருவித்து உண்டு நடத்தலைச் செய்யான் என்று முடிப்பர். இக்கருத்துப் பரிமேலழகருக்கும் உரையாசிரியக்கும் நியமம். இது மறைச்சொல்லின் முதல்நிலை விதிப்பொருள் பெற்றது.                                           - 72 உரை

தனக்குப் பயன்தரும் பேரறிவோர் வினை:                         80

யான் எனது என்னும் செருக்கு அறுத்தான்:

அவாவை விட்டான்; பிறவியை ஒழித்தான்; வீட்டை அடைந்தான்.              - 80 உரை

பிறருக்குப் பயன்படும் பேரறிவோர் வினை:                        80

நூலைப் பாடினான்; உரையை எழுதினான்; மாணாக்கனை அறிவித்தான்.         - 80 உரை

தனக்கும் பிறருக்கும் பயன்தரும் பேரறிவோர் வினை:                80

வேதாகமவழி விரும்பி ஒழுகினான் ;

இரக்கத்தொடு பலி இரக்கக் கொடுத்தான் ;

அரனது விழாவை மிக அலங்கரித்தான் ;

சிவனது பூசையை மிகச் சிறப்பித்தான்.                                     - 80 உரை

தனக்கும் பிறருக்கும் பயன்சாராப் பேரறிவோர் வினை:               89

அறம் பொருள் இன்பம் அளவின்றித் தேடினான்.

அட்டமாசித்தியை அருமையாய்த் தேடினான்.                               - 80 உரை

வெறுவினை - நல்வினை தீவினை எனும் இரண்டின் உட்படாது வருவது: எ-டு: கையை நொடித்தான்; காலை நெட்டிவிட்டான்; மூச்சுவிட்டான்; உறுப்பழுக்கை உருட்டி உதிர்த்தான்; வேர்வையைத் துடைத்தான்; சோற்றைப் பிசைந்தான் என்பன.