பக்கம் எண் :

280இலக்கணக் கொத்து 

எழுத்தொற்றுமை

103முப்பது எழுத்தும் முறையே ஒற்றுமை
அன்றியும் கசவும் சயவும் வயவும்
மனவும் லளவும் வலவும் அன்றியும்
பின்னும் பலவாம் ஒற்றுமை என்ப.

‘அன்றி’ ஈரிடத்திற் கூறியது, முன்புள்ளது - இன்றுள்ளது - சொல்ஒற்றுமை மூவிதியும் பகுத்து அறிதற்கு என்க.

எ-டு:

அறுமுகம் - ஆறுமுகம்-உயிரில் அ ஆ ஒற்றுமை]

மீற்கண் - மீன்கண் -[மெய்யில் ற, ன ஒற்றுமை]

பிக்கை - பிச்சை -[ ’’ க, ச ’’ ]
பங்கசம் - பங்கயம் -[ ’’ ச, ய ’’ ]
கோவில் - கோயில் -[ ’’ வ, ய ’’ ]
கலம் - கலன் -[ ’’ ம, ன ’’ ]
அலமருகுயிலினம்
அளமருகுயிலினம் - (சீவக. 49)

-[ ’’ ல, ள ’’ ]
வில்வம் - வில்லம் -[ ’’ வ, ல ’’ ]

‘இன்னும் பல’ என்றதனால், பகுதி முதல் ஐந்தும், பெயர் முதல் நான்கும், நிலைமொழியும் வருமொழியும் கொள்க.

இயம்பினார் - விளம்பினார் - [பகுதியில் பொருள் ஒற்றுமை]

உண்டனன் - உண்டான் - [சாரியை உண்மையும் இன்மையும் ஒற்றுமை]

உண்ணாநின்றான் - உண்கின்றான் -[ஆநின்று, கின்று ஒற்றுமை]

ஒன்றனை - ஒன்றினை - [அன், இன் சாரியை ஒற்றுமை]

முட்டீது - முஃடீது
கற்றீது - கஃறீது
-[டகர ஆய்தம் றகர ஆய்தம் புணர்ச்சி ஒற்றுமை]