| வினையியல் - நூற்பா எண். 20 | 235 |
7 | தலைமை இல்தலைமை என இரண்டு |
தச்சன் செய்த தேர், உழுது பயன்கொண்டான் வறியன் - தலைமை. அரசன் செய்த தேர், உழுது பயன்கொண்டான் வேந்தன் - இல்தலைமை. இங்ஙனம் வருதல்பற்றித் தலைமை, இற்றலைமை (நேரிடையாக அமையாத தலைமை) என இரண்டே என்பர். மழை பெய்த நீர், புல்லின இன்பம் - காரணம். சமைத்த அரிசி, உண்ட சோறு - காரியம். இவை பெயரெச்சம். உழுது விளைந்த நெல் - காரணம். பிணிதீரக்குடித்தான் மருந்து - காரியம்; இவை வினையெச்சம் இங்ஙனம் வருதல் பற்றிக் காரணம், காரியம் இரண்டே என்பர். 9 | முதல்வினை சினைவினை எனஇரண்டு |
[வி-ரை: சாத்தன் நொந்து கிடந்தான் - முதல்வினை. சாத்தன் கண் நொந்து கிடந்தான் - சினைவினை.] மருவின நாள் - மரீ இய நாள். தழுவிக் கொண்டான் - தழீஇக் கொண்டான். என வருதல் பற்றி இயல்பு, திரிபு என இரண்டே என்பர். பொருத தகர் - பொருதகர் (குறள். 486) வரிந்து புனைபந்து - வரிப்புனைபந்து (முருகு. 68) என வருதல் பற்றி விரி தொகை என இரண்டே என்பர். |