பக்கம் எண் :

222இலக்கணக் கொத்து 

இதனுள், வஞ்சித்து வாழ்வார்க்கு இல்லறத்தார் தானம் செய்தல் - நல்வினை தீவினையாயிற்று.

அரனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்
பரனடிக்கு அன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை ஆய்த்தே.           சிவ.சித்தி.எ.பா. 119

பாலன் - சண்டேசன். பிதாவைக் கொலை புரிந்தான் எனப்படுவானும் அவனே.

தலையிழந்தான் எவ்வுயிரும் தந்தான் பிதாவைக்
கொலை புரிந்தான் குற்றம் கடிந்தான் - உலகில்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம்
வினையும் விபரீத மாம்.                               தண்டி, எடுத்துக்காட்டு]

5செய்யா இருவினை செய்வினை ஆகி

செய்யா இருவினை செய்வினை ஆகும் என்பது என்னை யெனின்,

‘அறவினை யாதெனின் கொல்லாமை’                                 -கு. 321

‘நோன்புஎன் பதுவே கொன்றுதின் னாமை’

அழுக்காறாமை, வெகுளாமை, பெரியாரைப் பிழையாமை முதலாக, விலக்கினவற்றைச் செய்யாமையே நல்வினை செய்தல்.

பெரியோரைக் காணில் இருக்கை எழாமை, எதிர் செல்லாமை;

ஒருவனையாறு ஈர்த்த வழியும் விடம் தீண்டின வழியும்

அவ்விடர் தீர்க்கும் வல்லன் தீராமை;

தலைவியைப் புல்லுதற்கு விதித்த நாளில் புல்லாமை;

முதலாக விதித்தனவற்றைச் செய்யாமையே தீவினை செய்தல் எனவரும்.

‘துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்’                                           - கு. 1165

என்பதுவும் அது.