பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 28 - 30161

முருகனது வேல் - பொருள்;

முருகனது குறிஞ்சி - இடம்;

வெள்ளியது ஆட்சி - காலம்;

சம்பந்தனது தமிழ் - இயற்றிய நூல்;

சம்பந்தனது பிள்ளைத்தமிழ் - சம்பந்தன் பெயரால் இயற்றப்பட்ட நூல்.

- என உரிமையாய்த் தோன்றல் வகை ஐந்தும் முறையே காண்க.

சாத்தனது பசு, சாத்தனதுசெறு, சாத்தனதுபொன் என வேறாய்த்தோன்றல் வந்தமை காண்க. இவை முன் ஒருவர்க்கு உடைமையாயும், பின்வேறு ஒருவர்க்கு உடைமையாயும் வருதலின் ‘நிலைமையில் உடைமை’ என்றாம்.

இம்மூவகை வேற்றுமை வடநூலார் நூற்றொரு பேதமாக்குவர்.* 28

குறைக்குப் புறனடை

41குறையை இன்னும் கூறின் பெருகும்.                         29

இடத்தின் வகைகள்

42உரிமை இருவகை ஓரிடம் எங்கும்
எனநான்கு என்றே இயம்புவர் இடனே;
காலம் திக்குஆ காயம் வெயில்இருள்
நிலம்அரு உருமுதல் நிகழ்த்தப்படும்இடம்;
கூட்டிப் பிரித்தல் பிரித்துக் கூட்டல்
இருவரின் முடியும் ஒருவினைத் தொழிற்பெயர்
எனமூ வகைப்படும் இடம்அல் லாஇடம்;
இடத்தின் நிகழ்பொருள் இருவகை; அரு,உரு.
 

[வி-ரை: உரிமை, ஒற்றுமையிடம், கூட்டஇடம், எங்கும் பரத்தல்
என இடம் நான்கு வகைப்படும். இடம், காலம், திக்கு, ஆகாயம், வெயில், இருள், நிலம், அரு, உரு முதலிய நிலைக்களமாகும் இடங்களாம். இடம் அல்லா இடம் - கூட்டிப்பிரித்தல்.


* நன்னூல் 300. முனிவர் உரையுள் இந்நூற்பா உரைச் செய்தி உளது.