| | விரைது ழாவிய மென்பனி நீர்புனல் | | | அரைய னண்ணன்மெய் தூவவ மைந்தனன் | | | வரையி ழுக்கச்சி விறியின் வாங்கினார் | | | புரையி லாவவன் பொன்னகர் வாழ்நரே. |
(இ - ள்.) வருணன் நறுமண மூட்டிய மெல்லிய பனி நீரை எம் பெருமான் திருமேனியிற் றூவும் செயலிலீடுபட்டனர். குற்றமற்ற அவ்வருணனுடைய நகரின்கண் வாழுந் தேவர்கள் அத் திருத்தணிகைமலை இழுக்கலுறும்படி நீர் வீசுந் துருத்தியால் மணநீரைத் தூவா நின்றனர். (வி - ம்.) விரை - மணம். புனல் அரையன் - வருணன். (191) | | மாலை யாத்தக விகைவ ருக்கமும் | | | ஆல வட்டமு மார்ந்தசாந் தாற்றியும் | | | கோல வெள்ளையுங் கொண்டனர் பானுவும் | | | சாலு ஞாயிற்று லகவர் தாமுமே. |
(இ - ள்.) ஞாயிற்றுத் தேவனும் அவன் உலகில் வாழும் தேவர்களும், மலர்மாலை தூக்கிய குடை வகைகளையும், ஆல வட்டத்தையும் பொருந்திய சாந்தாற்றியையும் அழகிய மேற்கட்டியினையும் கைக் கொண்டனர். (வி - ம்.) சாந்தாற்றி - சிற்றால வட்டம் என்னும் விசிறி. வெள்ளை - மேற்கட்டி. பானு - ஞாயிறு. (192) | | சோதி நாரதத் தூமுனி பாலராய் | | | ஆதி யாழ்முதல் யாவும மைத்துளர் | | | கோதி லாதகு ணந்தகும் யாழினோர் | | | மாத ராரொடும் வண்புகழ் பாடினார். |
(இ - ள்.) குற்றமற்ற குணத்தகுதியுடைய கந்தருவர் தம் மகளிரொடும் ஞானவொளி படைத்த நாரதன் என்னுந் தூய முனிவரின் கூற்றிலடங்கிப் பேரியாழ் முதலிய இசைக்கருவிகளை எல்லாம் பண்ணுறுத்திக் கொண்டு எம்பெருமானுடைய வளவிய திருப்புகழைப் பாடா நின்றனர். (வி - ம்.) சோதி - புகழுமாம். ஆதியாழ் - பேரியாழ். யாழினோர் - கந்தருவர். (193) | | குளிர்ப்பக் கண்டகொ ழுங்கணு நெஞ்சமும் | | | மிளிர்ப்பக் காமரு மின்னினு டங்குபு | | | தெளிர்ப்பக் கைவள்ளி தெய்வத மாதரார் | | | தளிர்ப்பத் தீஞ்சுவை யாடலிற் றங்கினார். |
|