(இ - ள்.) இளம்பிறையும் பாம்பும் சூடிய சடையையுடைய பேரருள் வள்ளலாகிய எந்தையாருடைய கழல் கட்டிய திருவடிகளை மறவாத அன்பு வழிபாட்டானே கள்ளமுடைய புலன்களை வென்ற சிறப்புடைய கண்ணுவ முனிவன் ஒருநாள் ஒளியுடைய வைகுந்தத்திற் சென்று புகுந்தான். (வி - ம்.) சடிலம் - சடை. வைகல் - நாள். (16) | புள்ளே றுயர்த்த புயல்வண்ணன் றன்னோடு | | தள்ளாத வார்வத் துரையாடச் சார்குற்ற | | விள்ளாத சீர்த்தி விரதத் தவன்கோயில் | | உள்ளா லவனிருந்த வோங்கு சபையடுத்தான். |
(இ - ள்.) கருடக் கொடியுயர்த்திய முகில் வண்ணனாகிய அத்திரு மாலோடு ஒழியாத ஆர்வத்துடனே அளவளாவுதற்குச் சென்ற நீங்காத பெரும் புகழுடைய அக் கண்ணுவமுனிவன் வைகுந்தத்தே திருக் கோயிலின் அகத்தே அத்திருமால் வீற்றிருந்த உயரிய திருவோலக்கத்தை எய்தினன். (வி - ம்.) புள் - கருடன். சார்குற்ற - சார்ந்த. (17) வேறு | ஓங்குதன் கூற்றான் முச்சக மளந்த | | வுபேந்திரன் முதலியோர் சூழப் | | பாங்குறு நளினப் பனிமலர்ப் பீடம் | | பாவையோ டிருந்தபொன் னுடையோன் | | ஆங்கெதி ரடுத்த முனிவனை நோக்கா | | னையென விருக்கைநின் றெழான்மற் | | றீங்கணை கென்ன மொழிகளும் பயிற்றா | | னிருக்கையு மளித்திடா திருந்தான். |
(இ - ள்.) அழகிய தாமரையாகிய குளிர்ந்த மலர்ப் பீடத்திலிருந்த திருமகளோடிருந்த பொன்னாடையணிந்த திருமால் உயர்ந்த தன்னுடைய ஒரு கூறாகி மூன்றுலகங்களையும் அளந்த உபேந்திரன் முதலிய தன் பரிவாரங்கள் புடைசூழ இருந்தவன், தன்னெதிரே வந்த முனிவனைக் கண்ணாலும் நோக்கிலன் ; விரைந்து இருக்கையினின்று மெழுந்திலன். ஈங்கே வருக! வருக! என்று வரவேற்பும் முகமனுமாகிய இன்சொலு மொழிந்திலன் அம்முனிவன் இருத்தற்கோர் இருக்கை தானுங் கொடுத்திலன். (வி - ம்.) பொன்னுடை - பொன்னாலியன்ற ஆடை. உபேந்திரன் - திருமாலின் ஒரு கூறானவன். (18) | நன்றிவ னகந்தை யெனமுனி வெகுண்டு | | நசிக்குமித் திருக்கொடு தருக்கிப் |
|