| ஆனந்தந் தலைசிறப்ப வளவளா வியபின்றைக் | | கானந்து மலர்க்கூந்தற் கானவர்தங் குலமாது | | தேனந்து மலர்க்கடப்பந் தெரியலான் கழல்வணங்கி | | வானந்து மித்தணிகை வரைவாய்மை யருளென்றாள். |
(இ - ள்.) இவ்வாறு இருவரும் மகிழ்ச்சி பெருக அளவளாவிய பின்னர், மணம்வளரும் மலரணிந்த கூந்தலையுடைய குறமகளார், தேன் மிக்க கடப்பமலர் மாலையணிந்த பெருமான் திருவடிகளை வணங்கிப் பெருமானே ! துறக்கத்தை ஒத்த இந்தத் திருத்தணிகை மலையினது மாண்பினை திருவாய் மலர்ந்தருள்க என்று வேண்டினர். (வி - ம்.) ஆனந்தம் - இன்பம். கான் - மணம் - காடுமாம். நந்துதல் - மிகுதல். வானந்து - என்புழி, நந்து : உவமவுருபு. வாய்மை - மாண்பின் மேனின்றது. (29) வேறு | வாடிய தேவர்கள் வன்சிறை | | சாடிய வேற்படைச் சண்முகன் | | ஓடரி மாமழை யுண்கணாய் | | பாடுதுங் கேளெனப் பன்னுவான். |
(இ - ள்.) அசுரர்களாற்றுன்பமடைந்து மெலிந்த அமரர்களுடைய வலிய சிறையை வீடுசெய்த வேற்படையினையுடைய ஆறுமுகப் பெருமான் அங்ஙனம் வினவிய வள்ளியை நோக்கிச் செவ்வரியோடிய கரிய குளிர்ந்த மையுண்ட கண்ணையுடையோய் இம்மலைமாண்பினைக் கூறுவேம் கேட்பாயாக என்று கூறத்தொடங்கினன். (வி - ம்.) மா - கரிய. மழையுண்கண் : உவமத்தொகை. பாடுதும் - கூறுவேம். (30) | வளமலி காஞ்சிதன் வைப்பிடை | | அளவலி னிந்தவ டுக்கலை | | நளிவள மாநக ரேழுளும் | | ஒளியொடு சீர்த்துயர் வுற்றதே. |
(இ - ள்.) இந்தத் திருத்தணிகைமலை வளமிக்க காஞ்சிநகரத் தெல்லையுள் இருத்தலான் தலைமைத் தன்மையுடைய அக்காஞ்சி முத்தி நகர் ஏழனுள்ளும் புகழோடு சிறந்துயர்ந்ததாயிற்று. (வி - ம்.) காஞ்சி தன் வைப்பிடை இந்த அடுக்கல் அளவலின் ஐநகர் ஏழுளும் காஞ்சி உயர்வுற்றது என்க. ஐ - தலைமைத் தன்மை (31) | விலங்கலுள் வெள்ளி விலங்கல்பாப் | | பலங்கலி னார்க்குரித் தாங்கெமக் | | கிலங்குப லோங்கலு ளிவ்வரை | | பொலங்கொடி யார்வம் புணர்ப்பதே. |
|