| எப்பகை யுந்தரு மீண்டிருள் | | துப்புடைத் தொல்செருத் துன்னினார் | | வைப்பிடைத் தாழ்த்தும் வனப்பினும் | | அப்பெய ரிப்பதிக் காயதே. |
(இ - ள்.) காம முதலிய எல்லாப் பகையையு முண்டாக்காநின்ற செறிந்த ஆணவமலத்தோடே உண்டான பழைதாகிய வலிய போரினை மேற்கொண்ட முனிவரிடமாகிய அப்பகையையும் தணிக்கின்ற அழகுடைமையானும் அத்திருத்தணிகை என்னும் பெயர் இம்மலைக்குப் பொருந்துவதாயிற்று. (வி - ம்.) ஈண்டிருன் - செறிந்த ஆணவமலம். துப்பு - வலிமை. தாழ்த்துதல் - தணித்தல். (36) வேறு | என்று மிங்குநாம் | | மன்ற வைகுதல் | | நின்று நீலமே | | நன்று ணர்த்துமே. |
(இ - ள்.) இத்திருத்தணிகைமலையின்கண் யாம் எப்பொழுதும் வீற்றிருக்குமுண்மையைத் தேற்றமாக ஈண்டுள்ள செங்கழுநீர் அழியா திருத்தலினாலேயே பெரிதும் விளங்கும். (வி - ம்.) மன்ற - தேற்றமாக; (37) | காலை காய்பகல் | | மாலை மாமலர் | | நீல நேரவிங் | | கால மர்கின்றாம். |
(இ - ள்.) ஈண்டுச் சுனைக்கண் இந்திரனால் நடப்பட்ட செங்கழுநீர், காலையும் நண்பகலும் மாலையுமாகிய மூன்று பொழுதினும் சிறந்த மலரை ஈன்றளிப்ப ஏற்று ஈண்டு யாம் விரும்பியுறையா நின்றோம். (வி - ம்.) காய்பகல் : வினைத்தொகை. இங்கால் - ஆல் : அசைச் சொல். (38) | ஐந்து நாளசைந் | | தெந்த மிணையடி | | வந்து வணங்கினோர் | | பந்தம் பாற்றுவார். |
(இ - ள்.) ஐந்துநாள் இம்மலையின்கண் தங்கியிருந்து எம்பால் வந்து எம்மடிகளை வணங்குவோர் கட்டறுத்து வீடு பெறுவர். (வி - ம்.) அசைந்து - தங்கி. பந்தம் - மலப்பற்று. பாற்றுவார் - அகற்றுவார். (39) |