பக்கம் எண் :

திருநகரப் படலம்147

ஆகாயத்தின் கண்ணியலும் இராகுகேதுக்கள் அடைகின்ற காலத்து நெருங்குதலால் உடலை மூடிய தோலைக் கழற்றி மாதங்கடோறும் நிலை பெற்ற களிப்பினாற் றுள்ளும்.

(வி - ம்.) சுருங்கை - சிறுவாயில்; திட்டிவாயில் என்க. நாகம் - ஆகாயம்; இராகுகேதுக்கள். முன்னுகாலை - அடைகின்ற காலத்து. துளும்புறும் - துள்ளும். மதிதோறும் - மாதங்கடோறும்.

(115)

 செம்பொன் வார்கொடி சேணுற நிவந்துகற் பகத்தின்
 வம்பு லாவிய பொன்னகர் மதிற்புறம் புடைப்ப
 இம்பர் மேம்படு மிந்நகர் நிகர்க்கலாற் றாநீ
 உம்பர் வாழ்தலொண் ணாதென வொறுப்பபோன் றனவால்.

(இ - ள்.) செம்பொன்னாலாகிய நீண்ட கொடிகள் ஆகாயத்தைப்பொருந்த எழுந்து கற்பக மரங்களின் வாசனைபொருந்திய தேவருலகத்தின் மதிலைப் புறத்திலே அடிப்பன. இவ்வுலகத்தின்கண் மேம்பட்ட இத் தணிகாசலத்தினுக்கு ஒப்பாகாத நீ தேவருலகத்தி்ன்கண் வாழ்தல் தகாதென்று தண்டிப்பன போன்றனவாகும்.

(வி - ம்.) நிவந்து - எழுந்து. மதில் - இரண்டாவதன்றொகை. ஒறுத்தல் - தண்டித்தல்.

(116)

 வளியின் யாத்தபொன் னகர்கொடி வைகலுந் துளக்க
 நெளியு நீர்மையா னிலத்திடை விழுமென வஞ்சி
 ஒளிறு வாள்விழி யிரவினும் விழித்துளா ரொத்தார்
 அளிவி ழாமலர்ப் பொலந்தொடை யந்தரத் திமையார்.

(இ - ள்.) வண்டு வீழாத மலர்களாலாகிய மாலையை யணிந்த விண்ணுலகத்தின்கண்ணுள்ள தேவர்கள் வாயுமண்டலத்தால் யாக்கப்பட்ட பொன்னகரானது (தணிகைநகர் மாளிகையிற் கட்டிய) கொடிகள் நாடோறும் அசைக்க நெளிகின்ற தன்மையால் (அந்நகரானது, பூமியின்கண் விழுமென்று பயந்து விளங்குகின்ற ஒளியோடு கூடிய விழிகள் இரவின்கண்ணும் விழித்துள்ளாரை யொத்தனர்.

(வி - ம்.) வளியாத்த பொன்னகர் - வாயுமண்டலத்தாலியாக்கப் பெற்ற பொன்னகரமானது. நெளியும் நீர்மையினாலே விழித்துளர ரொத்தா ரென்க. துளக்க - அசைக்க.

(117)

 கன்னி கும்பங்க டாங்கிய வென்றொளி கதிர்க்குங்
 கன்னி கும்பங்க டாழ்ந்துபோங் கனகவா னரங்கில்
 துன்னி மாதரா ராடலிற் சுடர்மணி யுக்க
 மின்னு மீன்விசும் பிகழ்ந்திறை கொண்டமை வீழும்.

(இ - ள்.) பெண்களையும் பொற்குடங்களையும் (மேன்மாடங்கள் தாங்கியன) என்று கருதி கன்னிராசியும், கும்பராசியும் தங்கிச் செல்கின்றன. பொன்மயமாகிய பெரிய சபைகளில் பொருந்திப்பெண்கள் ஆடலினாலே சிந்தினவாகிய ஒளிபொருந்திய மணிகள் ஒளிர்