நிறைந்தளாய் பேரறிவாய் முதல் ஆகிய மணாளனை அழுத்தும் உள்ளத்தவர்க்கு அஞர் இல்லை. ஏ - அசைநிலை. முருகனை இடைவிடாது நினைப்பவர்களுக்கு ஒரு போதும் துன்பம் உண்டாகாது. (1) | இல்லை தெய்வமு முயிருமற் றில்லெனும் | | அல்லை வென்றொளி யாக்குவ தென்பவே | | நல்ல சீர்த்தணி கைக்கொரு நாயகன் | | சொல்லு லாவுஞ் சுடர்க்கழற் பாதமே. |
(கு - ரை.) அல் - இருள், அறியாமை. ஒளி - வெய்யில், பேரறிவு. சொல் - புகழ். நாயகன் பாதமே அல்லை வென்று ஒளியாக்குவது என்ப என்று கூட்டிப் பொருள் கொள்க. முருகன் திருவடி அன்பர்களுக்கு அறியாமையைப் போக்கி அறிவை நல்கும். (2) | பாத நான்குமப் பாத பயன்களும் | | ஓது நூலு முணர்த்து முரவனும் | | யாது மாயெனை யுந்தடுத் தாண்டனன் | | வேத மார்க்குந் தணிகை விமலனே. |
(கு - ரை.) பாதம் நான்கு - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. ஓதும் நூல் - சைவ ஆகமங்கள். உணர்த்தும் உரவன் - ஞானாசிரியர். விமலன் - இயல்பாகவே குற்றங்கள் அற்றவன். நான்கும், பயன்களும், நூலும், உரவனும், யாதுமாய் விமலன் எனையும் தடுத்து ஆண்டனன் என்க. (3) | விமல மாயுயிர் தோறும் விராய்நின்றும் | | கமல நாரணன் காட்சிக் கரியவன் | | திமில மாமறை தெள்ளுந் தணிகையில் | | அமல மேனிகொண் டாட்டய ரண்ணலே. |
(கு - ரை.) விமலம் - தூய்மை. விராய் நின்றும் - கலந்து நின்றாலும், கமலநாரணர் - கமலனும் நாரணனும் (நான்முகனும் திருமாலும்.) காட்சிக்கு - காணுதற்கு, திமிலம் - ஒலி. தெள்ளும் - ஆராயும். அமலமேனி - குற்றமற்ற உடல் (அறிவுருவம்). ஆட்டு - திருவிளையாடல், அயர் அண்ணல் - செய்து வரும் முருகன். நின்றாலும் என்பது 'நின்றும்' எனத் திரிந்து நின்றது. தணிகையில் மேனி கொண்டு ஆட்டு அயர் அண்ணல் விமலமாய் விராய் நின்றும் காட்சிக்கு அரியவன் ஆயினன் என்க. ஆயினன் என்பது வருவித்து உரைக்கப்பட்டது. |