பக்கம் எண் :

1484தணிகைப் புராணம்

யான், எனது என்னும் செருக்கு உள்ளவர்களால் முருகனைக் காண இயலாது என்பது கருத்து.

(4)

 அண்ணல் வேத னரிமுத லோரெலாம்
 நண்ணு மவ்வத் தொழில்கண் டயரவர்
 எண்ண கன்று தணிகை யிருங்கிரி
 யுண்ண யந்தமர்ந் தானொரு வள்ளலே.

(கு - ரை.) அண்ணல் - பெருமை. வேதன் - நான்முகன். அரி - திருமால். நண்ணும் அவ்வத் தொழில் - தத்தமக்குப் பொருந்திய படைத்தல், காத்தல் முதலிய தொழில்கள். கண்டு - செய்து. அயர் - மறத்தல். எண்அகன்று - எண்ணத்தின் நீங்கி, தணிகை இருங்கிரியுள் நயந்து அமர்ந்தான் எனப் பிரித்துப் பொருள் கொள்க.

தொழில் கண்டு அயர் அவர் எண்ணகன்று ஒரு வள்ளல் தணிகை இருங்கிரியுள் நயந்து அமர்ந்தான் எனக் கூட்டுக.

(5)

 வள்ளல் பூண்டு மறுமைப் பயன்கொள்வோர்
 உள்ள நாண வுபகரித் தொய்யெனப்
 பள்ள மேனடுப் பக்கமுங் கொட்புறீஇ
 நள்ளல் செய்தான் தணிகையி னாதனே.

(கு - ரை.) வள்ளல் பூண்டு - இரப்பவர்களுக்கு வரையாது கொடுத்தலை மேற்கொண்டு. மறுமைப் பயன் கொள்வோர் - அதனால், மறுமையில் இன்பம் அடைய விரும்புவோர். உபகரித்து - உயிர்களுக்கு வேண்டுவனவற்றை உதவி, பள்ளம் மேல் நடுப்பக்கமும் கொட்பு உறீஇ - நாகலோகம், விண்ணுலகம், மண்ணுலகம் ஆகிய உலகங்களைச் சூழ்ந்து (எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு) நள்ளல் - உறவு கொள்ளுதல்.

முருகன் பயன் கருதாது உயிர்கட்கு உதவுவதனால் பயன் கருதி ஈவோருள்ளம் நாணுவதாயிற்று.

பூண்டு கொள்வோர் உள்ளம் நாண தணிகையின் நாதன் உபகரித்து ஒய்யெனக் கொட்பு உறீஇ நள்ளல் செய்தான் எனக் கூட்டுக.

(6)

 நாத மாதி நவையென நீவியென்
 போத மும்புக ரென்றொரு வித்தன
 தோத ரும்பதத் தொற்றித் துணர்த்தினான்
 மாதர் காவி வரைத்தலை மன்னனே.

(கு - ரை.) நாதம் ஆதி - ஒலி முதலிய. நவை - தீது. நீவி. போக்கி. என் போதம் - என்னைப்பற்றிய அறிவு (பசுஞானம்) ஓதரும் பதம் என்பதனை ஓத அருமை பதம் எனப் பிரித்துப்