பொருள் கொள்க, 'ஓத' என்பதன் இறுதி அகரம் தொக்கது. ஒற்றித்து - ஒன்றாகச் சேர்த்து. மாதர் - அழகு. காவிவரை - திருத்தணிகைமலை. 'வரைத்தலை' - தலை : ஏழனுருபு. மன்னன் நீவி ஒருவித் தனது பதத்து ஒற்றித்து உணர்த்தினான் என்க. ஒருவனுக்குத் தன்னைப் பற்றிய அறிவு (உடம்பேதான் என்னும் அறிவு) இருப்பின் அது வீடுபேற்றுக்குத் தடையாகும் என்பது கருத்து. (7) | மன்னு மண்டமு மற்றவை போர்த்ததோர் | | நன்னர் நீருநற் பூதமும் யாவையும் | | தன்ன தாணையிற் றங்க நிறீஇயினான் | | கொன்னும் வேற்கைத் தணிகைக் குமரனே. |
(கு - ரை.) மன்னும் அண்டமும் - நிலைபெற்றுள்ள உலகமும் போர்த்தது - சூழ்ந்துள்ளதாகிய. நீரும் - கடலும். பூதமும் யாவையும் - ஏனைய அனல், வளி, வான் ஆகிய பூதங்களும் பிற பொருள்களும். தணிகைக் குமரன் அண்டமும், நீரும், பூதமும், யாவையும் தன்னது ஆணையில் தங்க நிறீஇயினான் என்க. (8) | குமர ராய்ப்புறங் கூனுங் கிழவராய் | | அமர ராதி யனைவரும் பொன்றினும் | | சமர வேற்கைத் தணிகைப் புராதனன் | | நமரங்கா ணந்தல் செல்லாக் கடவுளே. |
(கு - ரை.) குமரர் - இளமைப் பருவமுடையோர். புறம் - முதுகு. அமரர் - தேவர். பொன்றினும் - இறந்தாலும். சமரம் - போர். புராதனன் - பழமையானவன். நந்தல் செல்லா - அழிவு இல்லாத. நமரங்காள், குமரராய்க் கிழவராய் அனைவரும் பொன்றினும் தணிகைப் புராதனன் நந்தல் செல்லாக் கடவுளே ஆவன் என்க. (9) | கடவு ளாயவர் காசினி மாந்தராய் | | மடவ மாந்தர்கள் வானவ ராயுறப் | | படர்வி னைப்பய னல்கும் பராபரன் | | இடன கன்ற தணிகை யிறைவனே. |
(கு - ரை.) கடவுளர் - தேவர். மாந்தர் - மக்கள். வானவர் - தேவர். படர் வினைப்பயன் - தன்னைச் செய்தவர்களைவிடாது தொடர்ந்து வரும் வினையின் பயன். கடவுளாயவர் மாந்தராய். மாந்தர்கள் வானவராய் உற வினைப்பயன் நல்கும் பராபரன் தணிகை இறைவனே ஆவான். (10) |