பக்கம் எண் :

1490தணிகைப் புராணம்

 மறைநான்கு மேனை யலகற்ற நூலும்
           வழுவின் றுணர்ந்த மலய
 நிறைமா தவத்து முனிவோனை மாயை
           நிகளஞ் சிதர்ந்து கழலக்
 குறையாத ஞான மறிவித்த காவி
           வரையிற் குலாவு குமரன்
 தறையாதி யாரு முணர்வானு ணின்று
           சலியா துணர்த்து மறிவே.

(கு - ரை.) அலகு - கணக்கு. வழு - குற்றம், ஐயந்திரிபுகள். இன்றுணர்ந்த - இன்றி உணர்ந்த; இன்றி என்பது இன்று எனத் திரிந்து நின்றது. மலயம் - பொதியமலை. முனிவோன் - அகத்தியன். நிகளம் - விலங்கு. உள் - உள்ளம். தறை - தரை.

நான்கும் நூலும் உணர்ந்த மலய முனிவோனை நிகளம் கழல ஞானம் அறிவித்த குமரன் தறையாதியாரும் உணர்வான் உள் நின்று உணர்த்தும் அறிவே என முடிவு கொள்க.

தரை என்பது எதுகை நோக்கித் தறை என நின்றது.

(19)

 அறிவா னமைந்த முனிவோர் தவஞ்செய்
           தறல்போ லிருண்ட குழலார்
 கிறிமாய வெல்லு முறைசூழ்ந்த குன்று
           கிழவோ னெனப்ப கர்தரும்
 வெறிவீசு காவி மலர்மூன்று நாளும்
           விரியும் விலங்கல் விமலன்
 செறியாவி யாதி யுலகுந் தனாது
           கிழமைப் படுத்த சிவமே.

(கு - ரை.) அறல் - கருமணல். கிறி - சூழ்ச்சி. குன்று கிழவோன் - குறிஞ்சி நிலத்து இறைவன். வெறி - நறுமணம். காவி - கருங்குவளை. விலங்கல் - மலை. மூன்று நாள் - காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று போது.

அமைந்த முனிவோர் தவஞ்செய்து கிறிமாய வெல்லும் முறை சூழ்ந்த குன்று கிழவோன் எனப் பகர்தரும் விமலன் ஆவியாதி உலகும் தனாது கிழமைப் படுத்த சிவமே என்க.

(20)

வேறு

 சிவந்த வாயிதழ் மாதரார் செப்பிள முலையை
 உவந்த வாவுமுள் ளகவிரு ளொதுக்கியொள் ளொளிவாள்
 நிவந்த வாதவ னெனத்தரு நிராமய னடியார்
 தவந்த வாதுயர் தணிகையா னென்பதக் கோர்கள்.