| வல்ல மாதவர் குழாங்களும் வானவர் குழுவும் | | சொல்லு லாமறைத் துதிகொடு பரவுபூந் தணிகை | | அல்ல ராவிய மேனியா னடிதொழப் பெற்றோர்க் | | கில்லை யாம்பொரு ளெவ்வுல கத்தினு மிலையால். |
(கு - ரை.) வல்ல மாதவர் - எண்ணியவற்றை எண்ணியாங்கு இயற்றவல்ல முனிவர்கள். சொல் உலாம் - பரந்த புகழையுடைய. மறைத்துதி கொடு - மந்திரங்களைச் சொல்லி வழுத்தி. அல் அராவிய மேனியான் - இருளைப் போக்கிய திருவுரு உடையான். 'ஆல்' - அசைநிலை. முருகன் திருவடியை வணங்குவோர் எல்லாச் செல்வமும் எய்துவர் என்பது கருத்து. (24) | ஆல நீழலி லரனென நால்வருக் கருளும் | | கோல மேனியெங் குருபரன் குளிர்பொழிற் றணிகை | | சால வோங்கிய குமரவேள் சரண்டொழப் பெறாதார் | | ஞால மீதுபல் வினைகளு நலிதுயர் பெறுவார். |
(கு - ரை.) ஆல நீழல் - கல்லால மரத்தின் நிழல். சிவனருள் பெற்ற நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்பவர், சரண் தொழப் பெறாதார் - திருவடிகளை வணங்கப் பெறாதவர்கள். ஞாலம் - உலகம். முருகன் அருள் பெற்ற நால்வர் - நான்முகன் திருமால், சிவன். அகத்தியன் என்பவராவர். கவலையைப் போக்கும் மருந்து முருகன் திருவடியை வணங்குதலே ஆகும் என்பது கருத்து. (25) | பெறுவ தாவது பெரும்புன லுலகுவேட் டெவையும் | | உறுவ தாகிய தணிகையா னொலிகழற் சரணம் | | தெறுவ தாவது சேவலங் கொடியவ னருளான் | | மறுவ தாகிய யானென தெனுமிருண் மயக்கம். |
(கு - ரை.) பெறுவது ஆவது - அடைவதற்கு உரியது. பெரும்புனல் - கடல். வேட்ட எவையும் - விரும்பிய எல்லாப் பொருள்களையும். உறுவது - உறுவிப்பது. தெறுவது ஆவது - அழித்தற்கு உரியது. மறு - குற்றம். இருள் மயக்கம் - அறியாமை காரணமாக வரும் செருக்கு. பெறுவதற்குரியது தணிகையான் சரணம்; தெறுவதற்குரியது யான் எனது எனும் மயக்கம் என்க. (26) | மயக்க மாமல வுருவமாம் வனமுலை மடவார் | | முயக்க மாகிய முளிகருஞ் சேதகப் பயம்பிற் | | புயக்க லாதுபோ யழுந்திய வருவினைப் புயக்கு | | நயக்க மேவருந் தணிகையா னலத்தரு மருளே. |
|