பக்கம் எண் :

1500தணிகைப் புராணம்

 நெஞ்சிடை யொன்றுவாய் நிகழ்வ தொன்றுமெய்
 விஞ்சுற விளைக்குவ தொன்ற தாகவே
 வஞ்சக நடைபயின் மடமை யேனையும்
 அஞ்சலென் றாள்வையோ தணிகை யண்ணலே.

(கு - ரை.) நெஞ்சிடை ஒன்று - நினைப்பது ஒன்று. வாய் நிகழ்வது ஒன்று - சொல்லுவது ஒன்று. விஞ்சுற மெய்விளைக்குவது ஒன்று - அவ்விரண்டையும் கடந்து செய்வது ஒன்று. வஞ்சக நடை - வஞ்சித்து ஒழுகும் ஒழுக்கம். மடமை யேனையும் - அறிவு ஒரு சிறிதும் இல்லாத என்னையும்.

தணிகை அண்ணலே நெஞ்சிடை ஒன்று, வாய் நிகழ்வது ஒன்று, மெய், விளைக்குவது ஒன்றதாகவே வஞ்சக நடைபயில் மடமையேனையும் அஞ்சல் என்று ஆள்வையோ? என்க.

(44)

 அண்ணலம் பழமறை யதர்ப்பட் டுய்ந்திலேன்
 புண்ணிய வடியரைப் போற்றி யுய்ந்திலேன்
 கண்ணகன் றணிகையங் கடவுட் குன்றினாய்
 பண்ணிய வினைதபப் பரிவு நாணிலேன்.

(கு - ரை.) அண்ணல் - பெருமை. அதர் - நெறி. போற்றி - வழிபட்டு. பண்ணிய வினைதப - முன்செய்த வினைவந்து விலக்கியதனால் பரிவு நாண் இலேன் - அன்பும், நாணும் இல்லாதவன் ஆனேன்.

தணிகையங் குன்றினாய், மறை அதர்ப்பட்டு உய்ந்திலேன்; அடியரைப் போற்றி உய்ந்திலேன்; வினைதபப் பரிவு நாண் இலேன் என்க.

(45)

 நாணிலா னெனப்பிறர் நகைக்க மற்றெனக்
 கேணிலாம் வினைப்பய னிருக்கி னேற்குமுன்
 கோணிலா மிவ்வுட லருளிற் கொன்றிடாய்
 சேணிலா வியபுகழ்த் தணிகைச் செல்வனே.

(கு - ரை.) தணிகைச் செல்வனே, ஏண் நிலாம் - உன்னாலும் அழிக்க முடியாதவாறு வலிமை பொருந்திய. வினைப்பயன் எனக்கு இருக்கின் - வினைப்பயன் மேலும் நுகர்வதற்கு இருக்குமானால். ஏற்குமுன் - அவ்வினைப் பயன்வந்து என்னை அடைவதற்குமுன். கோள் நிலாம் - தீமைக்கு இருப்பிடமாக உள்ள.

தணிகைச் செல்வனே, பிறர் நகைக்க எனக்கு ஏண் நிலாம் வினைப்பயன் இருக்கின் இவ்வுடல் அருளிற் கொன்றிடாய் என்க.

(46)

 செல்வமு மதற்படு செருக்கு மேதகு
 கல்வியு மதற்படு களிப்பும் பார்த்தொரீஇச்
 சொல்வளர் ஞானமே துளையு மாறருள்
 கல்வளர் தணிகையங் கருணை யாளனே.