பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1505

 தீய வாயின பிறருழை நினைக்கவும்
           செப்பவுஞ் செயவன்னோ
 நீய றாயிரம் உரையுரு வறாயிரம்
           எனவுமுன் னிலைநின்றீர்.

(கு - ரை.) வாயல் ஆம் நலம் - இன்றியமையாத பொருத்தமான நன்மை. பயக்குமேல் - பிறர்க்குச் செய்யுமானால், மறு இலார் - குற்றமற்ற பெரியோர்கள். அறாயிரம் - ஆறாயிரம். முன்னிலை நின்றீர் - முன்வந்து நிற்கின்றீர்.

நலம் பயக்குமேல் பொய்ம்மையும் சொலக் கண்டும் இறையவன் தாட்டுணை தொழாரென எவன் நெஞ்சே தீயவாயின பிறருழை நினைக்கவும், செப்பவும், செயவும் அன்னோ நின்றீர் என்க.

(57)

 நின்றி லாதவிவ் வுடலினை நிலையென
           நினைந்துமற் றிதிற்சாலத்
 துன்று நோயெலாந் துமித்தபிற் றணிகையாற்
           றொழுதருள் பெறுகிற்பாம்
 என்று நெஞ்சமே மட்சுவர் கழுவுவார்க்
           கெதிர்ந்துவீண் படநாள்கண்
 மன்ற நீத்தனை யினித்திரை யொழித்தகன்
           வாரியா டுதிபோலும்.

(கு - ரை.) துமித்தபின் - சிதைத்தபின்; பெறுகிற்பாம் - பெறுவோம். மண்சுவர் - மண்ணாலெடுத்த சுவர். திரை ஒழித்து - அலைகளை நீக்கிவிட்டு. வாரி - கடல்.

உடலினை நிலையென நினைந்து நோயெலாம் துமித்தபின் தொழுது பெறுகிற்பாம் என்று நெஞ்சமே மட்சுவர் கழுவுவார்க்கு எதிர்ந்து நாள்கள் நீத்தனை; இனி, திரை ஒழித்து வாரி ஆடுதிபோலும் என இணைத்துப் பொருள் கொள்க.

(58)

 போலி யானவை செய்யுளுட் கிடப்பினும்
           புலவரன் னவைதேர்வார்
 போலி யாயடி யார்குழாம் புகினுமுன்
           புகருல கறியாகொல்
 பீலி மாமயி லெதிரெதி ராட்டயர்
           பெருவனப் பிளஞ்சோலை
 வேலி யோங்கலந் தணிகையாற் குள்ளமே
           மெய்த்தொழும் பினையாகாய்.