பக்கம் எண் :

1508தணிகைப் புராணம்

 தாழ்ந்ததிறை திருமுன்னர்த் தயங்குமவ
           னருண்முன்னர்த் தாழக் கண்டேன்
 சூழ்ந்ததிறை திருக்கோயி றுலங்குமவ
           னருளெங்குஞ் சூழக் கண்டேன்
 வீழ்ந்ததிறை யுருப்படிம மவன்வடிவி
           லாவடிவம் வீழக் கண்டேன்
 வாழ்ந்ததிறை தணிகைவரை யவனருளா
           னந்தநிலம் வாழக் கண்டேன்.

(கு - ரை.) தாழ்ந்தது - வணங்கினது. தயங்கும் - விளங்கும். தாழ - தங்க. சூழ்ந்தது - வலமாகச் சுற்றி வந்தது. சூழ - நிறைய. வீழ்ந்தது - விழுந்து வணங்கினது. வீழ - மேவ.

இறை திருமுன்னர்த் தாழ்ந்ததும் அவன் அருள் தாழக் கண்டேன்; இறை திருக்கோயில் சூழ்ந்ததும் அவன் அருள் எங்கும் சூழக்கண்டேன்; இறை உருப்படிமம் வீழ்ந்ததும் அவன் வடிவிலா வடிவம் வீழக்கண்டேன்; இறை தணிகை வரை வாழ்ந்ததும் அவன் அருள்ஆனந்தநிலம் வாழக்கண்டேன். என இணைத்துப் பொருள் கொள்க.

(64)

 கண்டவிழித் துணையவுணர்க் காய்ந்தபெரு
           மானுருவ மன்றிக் காணா
 விண்டமலர் வாய்விலங்கல் வீறழித்தான்
           றிருப்புகழே யன்றி விள்ளா
 துண்டவகஞ் செவிதணிகை யுயர்வரையான்
           புகழமிழ்த மன்றி யுண்ணா
 மண்டியநெஞ் சகம்வள்ளி நாயகன்மெய்த்
           திறத்தன்றி மண்டா தம்மா.

(கு - ரை.) விழித்துணை - இரண்டு கண்களும். விண்ட மலர்வாய் - விரிந்த மலர் போன்றவாய். விலங்கல் - கிரவுஞ்சகிரி. விள்ளாது - திறவாது. அகம் செவி - செவியகம். அமிர்தம் - பால், தேவருணவு. மண்டாது - பருகாது.

விழித்துணை பெருமானுருவமன்றிக் காணா; மலர்வாய் திருப்புகழேயன்றி விள்ளா; அகஞ்செவி புகழமிர்தம் அன்றி யுண்ணா; நெஞ்சகம் மெய்த்திறமன்றி மண்டாது என்க.

(65)

 மாமலவா தனைதாக்க வையகத்து
           வந்துயங்கு மடமை நெஞ்சே
 ஏமுறுமா மலமாதி யிடையொருவுந்
           திருவெழுத்தை யியல்பி னோதித்