| | தூமணியா லிருளொதுக்கிச் சுடரிமைக்குந் | | | தணிகைவரைச் சூழல் வைகும் | | | காமருவே லவனிறைவிற் பரானந்த | | | வவசமாய்க் கலந்து நில்லே. |
(கு - ரை.) மாமல வாதனை - கொடிய மும்மலங்களால் வரும் துன்பங்கள். வந்து - பிறந்து. உயங்கும் - வருந்தும். ஒருவும் - நீக்கும். திருவெழுத்து - "நமக்குமாராய" என்னும் மந்திரம். தூமணி - உருத்திராக்கம். பரானந்தம் - வீடுபேறு. தாக்க வந்து உயங்கும் நெஞ்சே மலமாதி ஒருவும் எழுத்தை ஓதி மணியால் இருள் ஒதுக்கி இமைக்கும் சூழல் வைகும் வேலவன் நிறைவில் அவசமாய்க் கலந்து நில் என இணைத்துப் பொருள் கொள்க. (66) | | நில்லாத நீடுலக நெடுவிசும்பி | | | னெழுத்தென்ன நீங்கக் காட்டி | | | ஒல்லாத மலவறிவு முயிரறிவும் | | | பேரறிவா யொளிரா நிற்பக் | | | கல்லார கிரிமுருகன் கலந்தளித்த | | | சாக்கிரா தீதத் துண்மை | | | வல்லார்க ளைந்தொழிலு மைந்தொழிற்கா | | | ரணர்நிலையு மருவார் மாதோ. |
(கு - ரை.) கல்லாரம் - நீலோற்பலம். கும்பி - நரகம். துய்ப்பார் - அனுபவிப்பார். உலகம் விசும்பின் எழுத்து என்ன நீங்கக் காட்டி மலவறிவும், உயிரறிவும் பேரறிவா யொளிரா நிற்ப முருகன் கலந்து அளித்த சாக்கிரா தீதத்து உண்மை வல்லார்கள் ஐந்தொழிலும் காரணர் நிலையும் மருவார் என இணைத்துப் பொருள் கொள்க. (67) | | மாதர்மணி வடம்வருடப் புளகரும்புங் | | | களபமுலை மடநல் லார்தங் | | | காதனனி கூர்ந்தவரிற் காதலெலாந் | | | தணிகைவரைக் கடவுட் செய்ய | | | பாதமலர் தனிலிருத்தும் பாவனைவல் | | | லாரவர்தாம் பரந்த கும்பி | | | பூதலம்வான் றுறக்கமெனு மிவற்றறிவோ | | | டுருத்திரிந்து போகந் துய்ப்பார். |
|