| சிவஞானப் பேறு அழிக்கும் அனைத்தும் வாவித்தாக்கி வினைவலியும் பாழில் நின்றும் ஒருவுமவர் தணிகை வரையாற்கு உரிய அடிமையாவார் என முடித்துப் பொருள் கொள்க. (70) வேறு | | ஆவா வடியேற் குறுமே யவலம் | | | தாவா வினைதாக் குமருட் டணிகை | | | மூவா முதலா தமுழுப் பொருடன் | | | பூவா ரடிசேர் தருபுண் ணியமே. |
(கு - ரை.) ஆவா : இரக்கக் குறிப்பு. அவலம் - துன்பம். தாவா - நீங்காத. தாக்கும் - அழிக்கும். மூவா முதலாத முழுப்பொருள் - மூத்து இறத்தலும், பிறத்தலும் இல்லாத முழுமுதற் கடவுள். பூ ஆர் அடி - தாமரை மலர் போன்ற திருவடி. அவலம் தாவா வினைதாக்கும் தணிகை முழுப்பொருள் தன் அடி சேர்தரு புண்ணியம் ஆவா அடியேற்கு உறுமே எனக் கூட்டிப் பொருள் கொள்க. (71) | | மேலா கியதே வர்விழுப் பதமும் | | | சாலா விமையோர் பதமுந் தவிர | | | மாலா மதிநல் கும்வரைத் தணிகைக் | | | காலா யுதநீள் கொடியான் கழலே. |
(கு - ரை.) மேலாகிய தேவர் - நான்முகன், திருமால் முதலியோர். சாலா இமையோர் - முப்பத்து மூவர். மாலாமதி - மெய்யுணர்வு. காலாயுதம் - கோழி. கழல் - திருவடி. பதமும் பதமும் தவிரக் காலாயுத நீள்கொடியான் கழல் மாலாமதி நல்கும் என இணைத்துப் பொருள் கொள்க. முப்பத்து மூவராவார் : வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர், ஆதித்தர் பன்னிருவர், மருத்துவர் இருவர். (72) | | கழலுங் கழலா விருகைக் குருகு | | | தழலுந் தழலா மதியந் தணிகை | | | அழலும் மழல்போ லவிர்வாற் பெறுமா | | | சுழலுஞ் சுழலா வெனுளத் துணையே. |
(கு - ரை.) குருகு - வளையல். மதியம் - சந்திரன். அவிர்வான் - விளங்கும் முருகன். சுழலும் - கலங்கும். |