| | பரமென் றிமையோர் பணியுந் தணிகை | | | வரனன் முதலென் றுமறைத் தொடரான் | | | உரனன் குகொளுத் தினுமுள் குவரோ | | | விரவும் பழவல் வினைவீ யலரே. |
(கு - ரை.) பரம் - கடவுள். இமையோர் - தேவர். வரன் - தலைவன், உரன் - அறிவு. உள்குவரோ - நினைப்பார்களோ? பழவல்வினை வீயலர் - பழமையான கொடிய வினையழியப் பெறாதவர்கள். இமையோர் பணியும் தணிகை வரன் நல் முதல் என்று மறைத்தொடரான் உரன் நன்கு கொளுத்தினும் வல்வினை வீயலர் உள்குவரோ என இணைத்துப் பொருள் கொள்க. (77) | | அலரோ னரியா தியர்தம் மையெலாம் | | | பலநாண் முறையாற் பணியும் பலனன் | | | பிலரா யொருகா லெழிலார் தணிகைப் | | | புலவோற் பணியும் பலன்போ லருண்மோ. |
(கு - ரை.) அலரோன் - நான்முகன். அரி - திருமால். முறையால் - முறைப்படி. பலன் - பயன். ஒருகால் - ஒரு முறை. தணிகைப்புலவோன் - முருகன். அருண்மோ - அருளுமோ. அலரோன் ஆதியர் தம்மைப் பலநாள் பணியும் பலன் அன்பு இலராய் ஒருகால் தணிகைப் புலவோற் பணியும் பலன் போலருண்மோ என்க. (78) | | மோகத் தழுந்து முகுந்தன் முதலா | | | நாகத் தவர்நல் குவரந் தணிகை | | | ஏகத் தொருவள் ளலிரங் கிவிராய்ப் | | | பாகத் தளவிற் பகிருங் கொடையே. |
(கு - ரை.) மோகம் - ஆசை, காமம். முகுந்தன் - திருமால். நாகத்தவர் - விண்ணுலகத்தவர், தேவர். ஏகத்து ஒரு வள்ளல் - தனிமுதலாயுள்ள முருகன். பாகத்தளவில் - அன்பர்களின் பக்குவத்திற்கு ஏற்ப. பகிரும் - பகிர்ந்து நல்கும். தணிகை வள்ளல் இரங்கி விராய்ப் பாகத்து அளவில் பகிரும் கொடை மோகத்து அழுந்தும் முகுந்தன் முதலாம் நாகத்தவர் நல்குவர்? என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க. முருகன் போன்று நல்க முகுந்தனாலும் முடியாது என்பது கருத்து. (79) | | கொடையா துமிலார் கடமைக் குறையுற் | | | றுடையா யெனவேத் தியுயங் குறுவீர் | | | கொடையா லுயருந் தணிகைக் குருவை | | | உடையா யெனவண் மினிருய் யுமினே. |
|