| உண்டு என்ற ஓர்ச்சியும் அற்று முழுதும் அது அதுவாய்க் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றுக் கலங்கிச் சுழலும் புலையேனை வடிவு மூன்றுங் கொண்டு குமரன் ஆண்டது இறும்பூதே என்க. (84) | | இறும்பூ தீட்டுஞ் சகலத்தி | | | லீண்டி யாண்ட தெனவியப்போ | | | தெறும்போக் கிருளா ணவத்தழுந்திச் | | | செயலற் றிருந்த வந்நாளில் | | | உறும்பால் வினைக்கீ டானவுட | | | லுதவிச் சகலத் துறுத்தன்னோ | | | நறும்பூங் காவி வரைப்பெருமா | | | னல்கு மதுமற் றோர்ந்தவர்க்கே. |
(கு - ரை.) சகலர் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றுடனும் கூடியவர்கள். இவர்களுக்குக் காரணம், புரியட்டகம், தூலம் என மூவகைச்சரீரங்களுண்டு. தெறும் - அழிக்கும். பால் - ஊழ். நல்குமது - அருள்வதனை. ஓர்ந்தவர்க்கே - உணர்ந்தவர்களுக்கு. என வியப்போ - என்ன வியப்போ. ஆணவத்தழுந்தி இருந்த அந்நாளில் பால்வினைக்கு ஈடான உடல் உதவிச் சகலத்து உறுத்துப் பெருமான் நல்குமது ஓர்ந்தவர்க்கு ஈட்டும் சகலத்தில் ஈண்டி ஆண்டது என வியப்போ என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க. (85) | | தவர்க்கே யருளுந் தவவொழுக்கஞ் | | | சாரா தவமே யுண்டுடுக்கும் | | | அவர்க்கே தொன்று மருளானென் | | | றறைவா ரறிவு நுணுகாதார் | | | எவர்க்கே துண்டாம் வானரங்க | | | ளிகலி யுகளும் பொழிறணிகைத் | | | துவர்க்கே "ருவப் படைவேற்கைத் | | | தோன்ற லருளா தொழிந்திடினே. |
(கு - ரை.) சாராது அவமே உண்டு உடுக்கும் அவர்க்கு ஏதொன்றும் அருளான் எனப் பிரித்துப் பொருள் காண்க. துவர் - பவளம். கேழ் - நிறம். அறிவுநுணுகாதர் வேற்கைத் தோன்றல் தவர்க்கே அருளும், தவ ஒழுக்கம் சாராதவர்க்கு அருளான் என்று அறைவார்; (அவர் கூறுவது முற்றிலும் பொய்) அவன் அருளாது ஒழிந்திடின் எவர்க்கு ஏது உண்டாம் என்க. அவன் என்னும் சுட்டுப்பெயர் வருவிக்கப்பட்டது. (86) |