| எம்பெருமான் எனை யான் தனை மடுத்து வயங்கும் நிலை அளித்ததும் மல உருவாகி அலைத்து அழித்த உலகம் எல்லாம் அருளுருவாகிச் சுகம் பெருக்கும் திறங் கண்டேன் என மாற்றிக் கூட்டிப் பொருள் காண்க. (96) | | அளித்துநிறுத் தமிழ்த்துமறைத் தருளுமுரு வாதியாய்க் | | | களித்துநடங் குயின்றவையுங் கடந்தொளிருந் தன்னியல்பைத் | | | துளித்தமதுக் காவிவரைச் சூழிளையோன் றன்னருளால் | | | தெளித்தலுமற் றவனுருவந் தீப்பிழம்பிற் றொழுதேனே. |
(கு - ரை.) அளித்து நிறுத்து அமிழ்த்து மறைத்து அருளும் ஆதி - ஆக்கல் முதலிய ஐந்தொழிலும் செய்தருளும் முதல்வனாய். அவையும் கடந்து - ஐந்தொழில்களையும் கடந்து. தீப்பிழம்பு - ஒளியின் கூட்டம். "தீ" ஆகு பெயர். ஆதியாய்க் களித்து நடம் குயின்று கடந்து ஒளிரும் தன் இயல்பை இளையோன் தன் அருளால் தெளித்தலும் அவன் உருவம் தீப்பிழம்பிற் றொழுதேன் என்க. (97) | | தொழுதேத்தப் படுவதுவுந் தொழுதேத்து விப்பதுவும் | | | தொழுதேத்து வதுமற்ற சுகப்பெருக்கி லதீதமாய்த் | | | தொழுதேத்தப் படுந்தணிகைத் தோன்றலுரு வாயின்றித் | | | தொழுதேத்து மெவ்வுயிர்க்குந் தோன்றாமல் நின்றனனே. |
(கு - ரை.) சுகப்பெருக்கு - இன்ப வெள்ளம், பேரின்பம். அதீதம் - கடந்து நிற்பது. எவ்வுயிர்க்கும் - எல்லாவுயிர்களுக்கும். ஏத்தப் படுவதும், ஏத்துவிப்பதுவும், ஏத்துவதும் அற்ற சுகப் பெருக்கில் அதீதமாய் ஏத்தப்படும் தோன்றல் உருவாய் இன்றி எவ்வுயிர்க்கும் தோன்றாமல் நின்றனன் என்க. (98) | | நின்றனவுஞ் சரிப்பனவு நிலையினவு நிலையாவும் | | | அன்றியனைத் தினுநிறைந்த வருட்கடலி னினிதாடி | | | மன்றல்கமழ் காவிவரை வள்ளலவர் வரிநந்தக் | | | குன்றிவர்ந்த தவரன்றே குன்றமென வசைவற்றார். |
(கு - ரை.) நின்றன - நிலையியற் பொருள்கள். சரிப்பன - இயங்கியற் பொருள்கள். நிலையின - உள்ளன. நிலையா - இல்லன. வள்ளலவர் வரி நந்து - முருகனின் வடிவம் ஆகும். அக்குன்று இவர்ந்ததவர் - அக்குன்றில் விரும்பியுறையும் தவமுடையோர். குன்றமென அசைவு அற்றார் - மலைபோன்று துளக்கம் (நடுக்கம்) அற்றவராவர். அனைத்தினும் நிறைந்த கடலின் ஆடி வள்ளல் வரி நந்து அக்குன்று இவர்ந்ததவர் அன்றோ குன்றம் என அசைவற்றார் என்க. தணிகைவரையை அடையாதார் மனக்கவலை நீங்கப் பெறார் என்பது குறிப்பு. (99) |