பக்கம் எண் :

1532தணிகைப் புராணம்

 190 மலர்முலை மடவார் கலவிகா முறுநரு
           மிரண்டறு கலப்பி னின்பநச் சுநரு
           மினையபல் வேறு நினைவின ரெவரும்
           வாட்டுவ தணப்பவும் வேட்டன மணப்பவு
           மேற்கொண் டெழுந்து மேனா ணேர்ந்த
 195 பொற்கிழித் திரளும் பூந்துகின் முடையும்
           மணிப்பூட் பேழையும் வார்தரு கவரியும்
           பைம்பொற் கவிகையுஞ் செம்பொற் சிவிகையு
           மூர்தியுங் கொடியும் வார்விசி முரசுஞ்
           சூட்டுவா ரணமுந் தோகைய மயிலுந்
 200 தத்தமக் கியன்ற தழீஇயினர் போது
           மோசைதிக் கதிர்க்கு மாசனப் பெருக்கங்
           காண்டொறுங் காண்டொறு மீண்டிய களியே
           னுடங்குசென் றிருப்பா னொருப்பட் டெழலுந்
           துன்னிய விழுமநோய் தன்ன ரீங்க
 205 வுறுதுயர் யாக்கை சிறிதுவலி யெய்த
           வொய்யெனக் கிளர்ந்த வுவகைநெஞ் சத்துப்
           படர்பே ரூக்கம் பிடர்பிடித் துந்த
           வெழுந்தன னிம்மென வேகுத றொடங்கி
           யடிபெயர்த் தோறு மஞர்ப்பிணி நழுவ
 210 வுவரி நீரிற் றவவெழு மகிழ்வா
           லவன்மிசை பாடாஅ வனைத்து நெறியாகச்
           சென்றன னடுத்து மன்றனகர் நுழைதலும்
           வெருவுநோ யிருகூற் றொருகூறு விலங்கக்
           காட்சி யார்வங் கையிகந் தீர்த்தலின்
 215 நறுமணங் கமழு நந்திநதி குடையா
           தெழுமுனி வரர்த மெழுசுனை யாடா
           தலைமலைப் பகைஞ னருட்கயம் படியாது
           நாக வண்சுனை நன்புன றோயாது
           விண்டு தீர்த்த மேவரக் குளியா
 220 தலசவ னிருஞ்சுனை யழிபுனன் முழுகா
           சரவணப் பொய்கைத் தடம்புனற் றுளைந்து