| | மென்மெலக் குன்ற மீமிசை யிவர்ந்து |
| | காலை நண்பகன் மாலைமுப் போதும் |
| | 225 வைகல் வைகன் மலர்மூன்று தெரிக்கும் |
| | நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது |
| | புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலி |
| | னடியிடப் படாஅ வாரிடை வீதி |
| | யொதுங்குபு பைப்பைய வொருமுறை சூழ்ந்து |
| | 230 தூவுமெண் ணிலத்துத் தோயாது வெறுத்த |
| | தேவர்கள் குழுவுந் தேயத் தொழுதியுந் |
| | தடைஇய வாய றடையாது நுழைந்தாங் |
| | கொருவர்மெய் மணிப்பூ ணொருவர்மெய் வடுச்செய |
| | நெருங்கிச் சென்று நித்தில வாணகை |
| | 235 வள்ளி நாயகி மணத்தினை முடித்த |
| | கள்ள வேழக் கடவுளைப் பணியா |
| | வீரரொன் பதின்மர் வார்கழ றாழ்ந்துமற் |
| | றாவயின் வதியு மமரரைத் தொழுது |
| | பூதப் பகுப்பும் பூதகா ரணமு |
| | 240 மிந்தியக் கூட்ட மிரண்டுமுக் குணமு |
| | நந்துமாங் காரமு நலத்தகு கரணமு |
| | மிறுவாய் மாயை யெழுவா யேழுஞ் |
| | சுற்ற மென்னத் தோன்றிய வைந்தும் |
| | விராய்நின் றியக்கி மராதுநின் றொளிரு |
| | 245 மாரா வின்ப வருணிலை யம்ம |
| | தீரா மலப்பிணி தீர்த்தருள் கொழிப்ப |
| | வருட்டிரு வுருவுகொண் டவிர்மணித் தவிசின் |
| | ஞான சத்தியுங் கிரியா சத்தியும் |
| | வானவர் கோமான் வளம்பயின் மகளுங் |
| | 250 கானவர் நலங்கூர் கன்னியு மென்ன |
| | விரண்டு பாலு மிருந்தனர் களிப்பக் |
| | கண்டமெய் யடியர் கலவினர் போற்றக் |
| | காணா விண்ணவர் கலவா தேத்தக் |
| | கட்கடை யொழுகுங் கருணை நோக்கமோ |
| | 255 டினிதுவீற் றிருக்கு மெழினேர் காண்டலு |
| | மெஞ்சுநோய் துவர விரியல் போக |
| | விஞ்சுநாற் பொருளு மேவந்து துவன்ற |
| | வாற்றாக் கடுந்துய ரருநர குழப்பவர் |
| | நோற்றமுன் னூழ்நனி நூக்கலு நொடிப்பி |