பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1533

           மென்மெலக் குன்ற மீமிசை யிவர்ந்து
           காலை நண்பகன் மாலைமுப் போதும்
 225 வைகல் வைகன் மலர்மூன்று தெரிக்கும்
           நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது
           புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலி
           னடியிடப் படாஅ வாரிடை வீதி
           யொதுங்குபு பைப்பைய வொருமுறை சூழ்ந்து
 230 தூவுமெண் ணிலத்துத் தோயாது வெறுத்த
           தேவர்கள் குழுவுந் தேயத் தொழுதியுந்
           தடைஇய வாய றடையாது நுழைந்தாங்
           கொருவர்மெய் மணிப்பூ ணொருவர்மெய் வடுச்செய
           நெருங்கிச் சென்று நித்தில வாணகை
 235 வள்ளி நாயகி மணத்தினை முடித்த
           கள்ள வேழக் கடவுளைப் பணியா
           வீரரொன் பதின்மர் வார்கழ றாழ்ந்துமற்
           றாவயின் வதியு மமரரைத் தொழுது
           பூதப் பகுப்பும் பூதகா ரணமு
 240 மிந்தியக் கூட்ட மிரண்டுமுக் குணமு
           நந்துமாங் காரமு நலத்தகு கரணமு
           மிறுவாய் மாயை யெழுவா யேழுஞ்
           சுற்ற மென்னத் தோன்றிய வைந்தும்
           விராய்நின் றியக்கி மராதுநின் றொளிரு
 245 மாரா வின்ப வருணிலை யம்ம
           தீரா மலப்பிணி தீர்த்தருள் கொழிப்ப
           வருட்டிரு வுருவுகொண் டவிர்மணித் தவிசின்
           ஞான சத்தியுங் கிரியா சத்தியும்
           வானவர் கோமான் வளம்பயின் மகளுங்
 250 கானவர் நலங்கூர் கன்னியு மென்ன
           விரண்டு பாலு மிருந்தனர் களிப்பக்
           கண்டமெய் யடியர் கலவினர் போற்றக்
           காணா விண்ணவர் கலவா தேத்தக்
           கட்கடை யொழுகுங் கருணை நோக்கமோ
 255 டினிதுவீற் றிருக்கு மெழினேர் காண்டலு
           மெஞ்சுநோய் துவர விரியல் போக
           விஞ்சுநாற் பொருளு மேவந்து துவன்ற
           வாற்றாக் கடுந்துய ரருநர குழப்பவர்
           நோற்றமுன் னூழ்நனி நூக்கலு நொடிப்பி