| | 260 னாயிடை நின்று மாயிருந் துறக்கம் |
| | புக்குழிப் பொலிவித் தொக்கதோற் றத்து |
| | விம்மித மகிழ்ச்சி மெய்தவ வீக்க |
| | வொருகதி விட்டுமற் றொருகதி யடைந்தவர் |
| | மயங்கறி வென்ன வுயங்குமுன் னுயங்க |
| | 265 லெய்யே னாகி யிறுமாப் பெய்தி |
| | செய்முறை தெரியாது திருமுன் னிற்ப |
| | விருமைப் பயனு மெளிதினுற் றளிக்கும் |
| | பூதியுந் திருவுருப் பூச்சுநன் களித்திட் |
| | டென்னைத் தன்வச மாக்கிய வுலகை |
| | 270 யென்வச மாக்கி யென்றுமோ ரியல்பி |
| | னின்றதன் னிலையி னீங்கா திருத்தி |
| | விடாதுவிட் டருள மெய்யருண் மேற்கொண் |
| | டொழியா தொழிந்து வழிவரு கின்றன |
| | னத்தகு பெருமா னருள்விளை யாடலைச் |
| | 275 சற்றிது கேண்மதி தவமேம் படுந |
| | விச்சொன் றின்றி விளைவுமிக் காக்கியும் |
| | விச்சுமிக் கிருப்ப விளைவுமுழு தொழித்து |
| | மொளிதலை வளர்ப்ப வொளிகளைத் தணித்து |
| | மழுக்கினைக் கழுவ வழுக்கினை யேற்றியு |
| | 280 முறுந்தொழி லாளர்க் குறாதுசே ணகன்றும் |
| | வறுந்தொழி லாளர்க் குவந்துடன் கலந்தும் |
| | விதித்தநல் விதிகளை விலக்கென வுவர்த்தும் |
| | விலக்கினை விதியென மேதக நயந்து |
| | மித்தகு தொழின்மை நித்தலு மியற்றிப் |
| | 285 பொற்றபே ரின்பருள் பெற்றிய னஃதான் |
| | றிருமுது குரவ ரெழுவாய்ச் சுற்றமொடு |
| | துயரிலங் குலகந் தோற்றுதற் பொருட்டுத் |
| | தந்தை யென்ன வைந்துமுக னாகியு |
| | மன்னை யென்ன மனோன்மனி யாகியும் |
| | 290 முன்முறை தந்தையர் தாய ரென்ன |
| | நாதஞ் சிவமே நலத்தகு விந்து |
| | மேதகு சத்தி வேறுவே றாகியும் |
| | பின்முறை தந்தையர் தாய ரென்ன |
| | மகேச னுருத்திரன் மகேசையுமை யாகியுந் |