| | 295 தமைய னென்னத் தந்திமுக னாகியுந் |
| | தனைய னென்னத் தாமரை மருட்டு |
| | மூவிரு முகமு முன்னான்கு கரமு |
| | மருவி வீற்றிருக்கு மொருதா னாகியுங் |
| | கடப்படு மிரண்டு கைகோ ளியங்க |
| | 300 நான வார்குழ னகையிழை யானையைக் |
| | கானவ ரரும்பெறற் காமரு மாதினைக் |
| | கற்பினிற் களவினிற் பொற்புற மணந்தும் |
| | பொருட்டுறை முழுதும் புரையின்றி நடப்ப |
| | வண்டகோ டிகளு மரைக்கணத் தளவையின் |
| | 305 வறிதுநகை தோற்றி யிறுவது புரியு |
| | மெறுழ்வலி யாற்ற லெய்யான் போல |
| | மந்திரந் தூது செலவிகன் மற்று |
| | மாற்றிவெஞ் சூர்வலி காற்றியுல கோம்பியு |
| | மெல்லா மறிந்தறி விக்குமவ் வியல்பைக் |
| | 310 கண்கூ டாகக் காட்டுவ னதாஅன்று |
| | மூவகை யுருவாய் மூவுல குயிர்த்து |
| | மூவகை யுருவு முயங்காப் பரம்பொருள் |
| | பந்தம் வீடு பல்லுயிர்க் கமைத்தும் |
| | பந்தம் வீடு படாத பெருந்தகை |
| | 315 யாருயிர்க் குயிரா யமைந்தன நடாவியு |
| | மாருயிர் காட்சிக் கணுகா வருந்திறற் |
| | றானாய் நின்று தற்காண் டனிமுத |
| | லளிகளி னளியா வளிகளூஉங் களிய |
| | னொளிகளி னொளியா வொளிகளூஉங் கொளியன் |
| | 320 வெளிகளின் வெளியா வெளிகளூஉங்கு வெளிய |
| | னளவினி னளவா வளவினூஉங் களவ |
| | னின்னா னொருவனை முன்னுபு சென்றவன் |
| | பூங்கழற் சேவடி போற்றுதி யாயின் |
| | பேரஞ ருறுத்த பேதுறு நோயுங் |