| | 325 காரண நோயுங் கையிகந் திரியக் |
| | கடைக்கணித் தருளிக் கரையினாற் பொருளுங் |
| | கொடைக்கட னீயிர் குறித்த வளவையி |
| | னெண்மடங் காற்றி யென்றுந் தீரா |
| | வகம்படித் தொழின்மையி னழுத்துவ னன்றே |
| | 330 யாடகப் பசும்பொற் பாடகச் சீறடி |
| | நாடக மகளிர் நவற்றிய வாடற் |
| | சிலம்பு கிண்கிணி தீங்குழன் முழவ |
| | முரசந் தூரி முழங்கொலி யானும் |
| | விண்டல முரிஞும் வியன்மணிப் புரிசைக் |
| | 335 கொண்டல்கண் படுக்குங் கோபுர நிரைக |
| | ளாடுகொடி சுமந்த மாடநெடு மாளிகை |
| | யின்னன பிறவு மன்னுத லானு |
| | மொலிதிரைக் கடலு மோங்குபல் வரையு |
| | முடங்குதொக் கண்மி யொண்டுறை யாடி |
| | 340 யிருபகுப் பினவா யிருகரை மருங்கும் |
| | நோற்றன வதியும் பேற்றினைத் தெரிக்கு |
| | மும்மையு மளிக்கு மூவா முழுமுத |
| | லைம்முக னாகி யமர்ந்தவீ ரட்டமு |
| | மறுமுக னாகி யமர்ந்தகீழ்க் கோட்டமும் |
| | 345 பொன்னு மணியும் புதுமலர்க் குவையும் |
| | திரைக்கயிற் றூஉய்த் திளைத்தெழுந் தொழுகு |
| | நந்தி யாற்று நறும்புனன் மடுக்குங் |
| | குரங்குகதிர்ச் சாலியுங் கொழுந்தீங் கரும்புங் |
| | குலைப்பூங் கதலியுங் கோட்டெங் கினமுங் |
| | 350 கோள்கண்மீப் பரிக்கும் பாளைக் கமுகும் |
| | வயின்வயிற் பொதுளி வளம்பல வுறந்த |
| | முருகலர்ப் பண்ணை யொருபுறஞ் சூழ |
| | வவரை துவரை யரிற்கதிர் வரகு |
| | சாமை யிறுங்கு ததைந்தன விளையுங் |
| | 355 கொல்லை முல்லை கோழிணர்ப் பூவையும் |
| | பந்தர் மாதவி யுந்திய கோங்கும் |
| | பைங்காழ் கொன்றை பசும்போற் சுண்ணமும் |
| | வளியுளர்ந் தெடுப்ப மறுபுல வரைப்பும் |
| | போர்த்தன கமழ்ந்து பொறிவண் டழைக்கு |