| | 360 மரும்புலப் புறவ மொருபுறஞ் சூழச் |
| | செருந்தி மந்தாரங் குருந்துவழை பாடலம் |
| | கோங்கு சண்பகம் வேங்கைமகிழ் சந்தனம் |
| | குங்கும மரவங் கோழகிற் கப்புர |
| | மில்ல மாவிரை வில்லம் பாங்கர் |
| | 365 பிடர்ஞெமை நமையாண் டடர்வரை யெகின்சே |
| | வசோகந் தேக்கே யாத்தி சூத |
| | மருது போதி வஞ்சி காஞ்சி |
| | ஞாழல் புன்னை நரந்தை மாதுளை |
| | பொகுட்டரை யிருப்பை பூஞ்சினைச் சரள |
| | 370 முன்னம் பலாசு முருக்கை வருக்கை |
| | சோதி மாமரந் தொத்தின நாக |
| | மன்றி யனைத்துந் துன்றிய கறிக்கொடி |
| | மல்லிகை முசுண்டை மற்றும் பரித்து |
| | மணங்கமழ் காமர் வல்லி யொன்றே |
| | 375 யிணங்குபூத் தருந்த னிகழ்ச்சியை நாடி |
| | வசைபடத் தத்த மிசைவிளக் குவபோற் |
| | பொறிவரிச் சுரும்பும் வெறிநுகர் தேனுந் |
| | தோகைமா மயிலுந் தொடிக்கட் பூவையுங் |
| | கிள்ளையுங் குயிலுந் தெள்ளுகுரற் காட்டி |
| | 380 வண்டளிர்ப் பொதும்பர் மருங்குகால் வளைஇ |
| | நுண்டளி நறுந்தே னோலாது திவளுந் |
| | கதைமலர்ச் சினைய தருவைந் துடுத்த |
| | பொன்னகர் வறுமையை முன்னிநக் காங்கு |
| | வேர னரன்றுக்க வெண்மணிக் குப்பையும் |
| | 385 பிறழ்பற் பேழ்வாய்ப் பின்முன் பார்வைச் |
| | சிங்கவல் லேறு பொங்கு சினந்திருகி |
| | யெழுந்துதாய்த் துமிப்ப விருங்கடா யானை |
| | மத்தகம் பிளந்து மாயிருங் குன்றத்து |
| | வெண்புன லருவி வீழ்வன போலச் |
| | 390 சலசல வுக்க தரளக் குவாலு |
| | நிலவுராய்த் தவழ நெமிர்ந்தன மிளிருங் |
| | கவான்மலைப் புனத்துக் கதிர்த்தினை காக்கு |
| | முவா மதிமுகத்தா ரோச்சினர் விடுக்குங் |
| | கவணையின் மணியோ கங்குற் கானவர் |