பக்கம் எண் :

1538தணிகைப் புராணம்

 395 விலங்கினந் துரக்கு மிலங்குகூர்ங் கணையோ
           வலைத்தர விசும்பி னிலைத்தரு கலன்கள்
           பல்வகை மின்கொடி யொல்கிவீழ்ந் தென்ன
           வெல்வரை நிரையும் பில்குகதிர் மணிப்பூங்
           காழுந் தாமமுங் கவினத் ததைஇய
 400 மண்டப மேடை மாடமே னிலைக
           ளியங்கா நிலைத்தே ரியங்குமணிப் பஃறேர்
           விமானவூர் திகளும் வேற்றுமை தோற்றா
           வளம்பல தழீஇயெம் மருங்குமெய் யடியா
           ரிடுமகிற் றூமமு மெக்கரிற் குவைஇய
 405 படரொளி யூட்ட பளிதக் குப்பை
           கான்றதீம் புகையுங் கழுமி விண்கெழுமி
           யிமையார் நாட்ட மிமைப்பன செய்ய
           மல்ல லாவண மறுகும் வீதியு
           நாடொறு மெழிலா னவநவ மாகி
 410 யிமைக்குநர் நாட்ட மிமையாமை செய்ய
           மண்டலம் விண்டல மாற்றிய தென்ன
           விறும்பூது பயவா வேர்குலாய்க் கிடந்த
           திசைகாப் பாள ரிசைநிறை தேவ
           ரலரவ னெடுமா லாதிய கடவுளர்
 415 முதுக்குறை யன்பின் முறைமுறை பழிச்சச்
           சாறுநா ளல்லது வேறுநா ளறியா
           துலகமுழு தோம்புபல் சிறப்பி
           னிலைபெறு தணிகை மலைகிழ வோனே.

திருத்தணிகை யாற்றுப்படை

மு ற் றி ற் று