செய்வனவும், சிரம், கரம், புயம் முதலியன பூமியிற் படியும்படி செய்வனவு மாகும். மொட்டு - அரும்பு. பட்டதை என்பதில் ஐ : சாரியை. (6) வேறு | வெளியூ டுவிரா யவளிச் சலமவ் | | வெளிசற் றும்விரா வுதலின் றதுபோல் | | விளியா துவிரா யவுயிர்த் தொகுதி | | விரவும் வினையின் பயனே துமுறா | | ஒளியே யுலகெங் குநிறைந் துணர்வுக் | | குணர்வா கியவின் பநெடுங் கடலே | | தெளிமா தவருள் ளகம்விள் ளரிய | | தேக்கா ரமுதே சரணஞ் சரணம். |
(இ - ள்.) ஆகாயத்தோடு கலந்த காற்றினதியக்கத்தை யவ்வாகாயம் சிறிதும் கலத்தலின்று; அதுபோலக் கெடாது (சிவமாகிய தன்னோடு) கலந்த உயிர்க் கூட்டங்களின்மாட்டுக் கலந்த நல்வினை தீவினைப் பயன்கள் சிறிதும் தன்னைப் பற்றாத ஒளிவடிவாக வுள்ளவனே! உலகெங்கணும் வியாபித்து அறிவுக்கறிவாகிய பேரின்பக் கடல்போல் பவனே ! (நித்திய மிஃது அநித்திய மிஃதென நூன்முறையானே) தெளிந்த பெரிய தவத்தினையுடைய ஞானிகள் அகத்துணின்றும் நீங்குதலில்லாத நிறைந்த அரிய தேவாமுதம் போன்றவனே! நினதாள்கள் எளியேனுக் கரணமாகும். (வி - ம்.) வெளி - ஆகாயம். வளிச்சலம் - காற்றினியக்கம். சற்றும் - சிறிதும். விளியாது - கெடாது. தொகுதி - கூட்டம். வினையின்பயன் - நல்வினை தீவினைப்பயன்கள். ஏதும் - சிறிதும். விள்ளரிய - நீங்குதலரிய. தேக்குதல் - நிறைதல். சரண் - திருவடி. சரண் - புகலிடம். இதனை "பன்மாண்.......சரண்சென்று தொக்க" என்னும் சிந்தாமணி, தன்மசரணம் சாதுசரணம் கூறிய செய்யுளானறிக. (7) | அருவென் றுருவென் றருவோ டுருவென் | | றறையும் மலபே தமுமா யவைமற் | | றொருவும் பொருளா யபரா பரனே | | யுடனின் றுயிரைத் தொழிலிற் புகுவித் | | திருளும் வினைமாய் வினெழுந் தொறுமங் | | கெய்யா மையருத் துமருட் செறிவே | | தெருளும் புலனில் லவரெய் தரிய | | தேக்கா ரமுதே சரணஞ் சரணம். |
(இ - ள்.) அருவமென்றும் உருவமென்றும் அருவுருவமென்றும் சொல்லப் பெறுகின்ற நவவித பேதமாகி அந்நவவித பேதங்களையும் |