| | வாழ்வு மிக்குளை யென்னில் வைகலும் | | | வீழ்ம னக்குறை மெத்த வுள்ளுபு | | | போழ்ம திச்சடைப் புனித னெந்தைமுன் | | | தாழ்தல் செய்திடச் சார்கு வாயலை. |
(இ - ள்.) எல்லாத் தேவரினும் நீ வாழ்க்கை மிக்குள்ளனையாயின் விரும்புகின்ற மனக்குறையை நிறைக்க நினைத்து நாடோறும் பிறைச் சந்திரனை யணிந்த சடையினையுடைய தூயனாகிய என் தந்தையாரின் முன்னர் வணங்கச் செல்வாயல்லை. (வி - ம்.) வீழ் - விருப்பம். மெத்த - நிறைக்க. போழ்தல் - பிளத்தல். (35) | | வலன்மி குத்தியே னென்னல் வந்தவன் | | | குலவு மெம்பியாற் கோட்பட் டீங்குறீஇ | | | அலம ராவுள மலமந் துத்தரம் | | | சிலவு நல்கிடாச் செய்கை பெற்றிலாய். |
(இ - ள்.) வலியினான் மிக்குள்ளாயெனின் நென்னற் பிறந்தவனாகிய விளங்குகின்ற என்றம்பியாற் கொள்ளப்பட் டிங்குப்பொருந்திச் சுழலுத லுறா தவுள்ளம் சுழலப்பெற்றுச் சில மறுமொழியும் கூற வியலாத செய்கையைப் பெற்றிருக்க மாட்டாய். (வி - ம்.) அலமரல் - சுழலல். வலன் - வலிமை. நென்னல் - நேற்று. நேற்று வந்தவன் என்றது மிகவும் இளைஞன் என்றவாறு. (36) | | இன்ன தன்மையா லிடி லெண்குணம் | | | மன்னி யெங்கணு மலர்ம ணம்மெனத் | | | துன்னி யாருயிர்த் தொகுதிக் கைந்தொழில் | | | முன்னி யாற்றுமம் முதல்வ னீயலை. |
(இ - ள்.) இங்ஙனமாய தன்மை நின்மாட்டிருத்தலான், ஒப்பில்லாத எண் குணங்கள் பொருந்தப்பெற்று மலர்மணம்போல யாங்கணும் கலந்து அரிய உயிர்த்தொகைகட்கு ஆக்கல், அழித்தல், அருளல், காத்தல், மறைத்தலாகிய ஐந்தொழிலையும், (உயிர்களின் பக்குவ நிலைக்கேற்றவாறு) கருதிச் செய்யும் தலைவனும் நீயல்லை. (வி - ம்.) ஈடிலா - ஒப்பிலா, முன்னி - கருதி. (37) | | உலகு யிர்ப்பதி னுயர்ந்து ளேனெனில் | | | அலகி லண்டமு மாக்கு நின்னையும் | | | குலவு மாலையுங் கோணை வன்கணத் | | | தலைவர் தம்மையுந் தந்த தில்லையே. |
(இ - ள்.) உலகங்களைப் படைத்தலினானே யான் உயர்வு பெற்றுளே னென்பாயாயின் அளவிலா அண்டங்களையும் படைக்கின்ற வுன்னையும், |