பக்கம் எண் :

262தணிகைப் புராணம்

(இ - ள்.) மிக்க இத்தகுதியோடுகூடிய வளப்பத்தினாற் பெருமையுற்றுப் பிறவிக்கேதுவாகிய வினைகளை நீங்கும் கயிலாயத்தின்கண்ணுள்ள கங்கையினை அழைத்தவனாகிய குமாரப்பெருமான் ஒப்பில்லாத (பூசைக்குரியனவாகிய) பல பொருள்களையும் உளவாக்கினான்.

(வி - ம்.) பெட்பு - பெருமை. கருவினை - பிறவிக்கேதுவாகிய வினை. மறுவின்மாயை - சுத்தமாயை, இதனைச் "சூருயிர் குடித்தவன் சுத்தமாயையின் - ஆரவிவ்வகையெலா" மமைத்தானெனப் பின்னர்க் கூறுதலானறிக.

(15)

 இலக்கண முழுதமை யிலிங்கம் வேதிகை
 அலக்கணந் தித்தவர் விழையு மாலயம்
 மலக்கணம் விடைகொண்மண் டபங்கள் கோபுர
 நலக்கண மணிகொடு நவம தாக்கினான்.

(இ - ள்.) (சிற்பநூலில் இலிங்கத்திற்குக்கூறிய) இலக்கணமுற் றிலுமமைந்த இலிங்கமும், பீடமும், துன்பத்தின் முடிவைக் கண்டவரும் விரும்பத்தக்க கோவிலும், மலக்கூட்டங்கள் விடைகொள்ளுதற் கேதுவாகிய மண்டபங்களும், கோபுரங்களும் நல்ல கூட்டமாகிய அரதனங்களாற் புதிதாகச் செய்தான்.

(வி - ம்.) வேதிகை - பீடம் ; பூசைத்திண்ணை யென்பாருமுளர். அலக்கண் - துன்பம். அந்தித்தவர் - முடிவைக்கண்டவர். உம்மை விகாரத்தாற்றொக்கது. அலக்கணந்தித்தவரெனவே சீவன் முத்தரென்பது பெற்றாம். அவரும் ஆலயவழிபாடு செய்யவேண்டுமென்பார் "அலக்கணந்தித்தவர் விழையுமாலயம்" என்றார். இதனை "ஆலயந் தானுமரனெனத் தொழுமே" என்னும் சிவஞானபோதச் சூத்திரத்தானுணர்க. மலக்கணம் - மலக்கூட்டம். நலக்கணமணி - நல்ல கூட்டமாகிய அரதனம்.

(16)

 பித்திகை யெங்கணும் பெருகு மான்மதம்
 மெத்திய சந்தன விழுது கொட்டுபு
 பைத்தெழு விரைப்புகை பாய்த்தி யோசனை
 பொத்திய மணங்குலாம் பொற்பி யற்றினான்.

(இ - ள்.) சுவர்த்தலமெங்கணும், வாசனை மிகுகின்ற புழுகையும் நிறைந்த சந்தனச்சாந்தையும் மெழுகிப் பரவியெழுகின்ற வாசனைப் புகையையும் பரவச்செய்து நாற்காததூரம் பொதிந்த வாசனை விளங்கும் பொலிவோடு செய்தான்.

(வி - ம்.) பித்திகை - சுவர். விழுது - குழம்பு. கோட்டுபு - பூசி. பைத்து - பரவி. விரைப்புகை - வாசனைப்புகை. யோசனை - நாற்காத தூரம். இதனை "ஒரு நாவிகலந்தோசனை கமழுமே" என்னும் சிந்தாமணி (விமலை 13) செய்யுளானு முரையானு முணர்க. பொத்திய -

(17)

 தூண்டொறும் வாருறை சேர்த்தித் தூங்குகாய்
 மாண்டமென் கதலிவார் கரும்பு பூகதம்