| ஆண்டுறுத் தும்பரி னவிர்பொற் பட்டினால் | | காண்டகு விதானங்கள் கற்பித் திட்டனன். |
(இ - ள்.) தூண்கடோறும் நீண்ட உறைகளையிட்டுத் தொங்குகின்ற காய் மாட்சிமைப்பட்ட மெல்லியவாழையும், நீண்ட கரும்பும், கமுகமரங்களும் ஆகியவற்றை ஆண்டுச் சேர்த்து மேலே விளங்குகின்ற அழகிய பட்டினால் யாவருங் காணத்தக்க மேற்கட்டியும் செய்தான். (வி - ம்.) உறை - மேற்போர்வை; இது தூணிலழுக்கடையாம லிடப்படுவது. "தூணுறை பொதிவாரும் தோரணம் நடுவாரும்" என்னும் காஞ்சிப் புராணம் அகத்தியப்படலச் செய்யுளா னிதனை அறிக. (18) | ஆடகத் தகடுக ளடுத்த கீழ்நிலம் | | பாடமை மணித்துகட் பசும்பொற் சுண்ணநீர் | | நாடரு விரைகலந் தொழுக்கி நன்மணி | | தோடவிழ் மலரறு கரிசி தூவினான். |
(இ - ள்.) பொற்றகடுகளாற் பொருந்திய கீழிடத்தின்கண் பெருமை பொருந்திய அரதனப்பொடிகளும், பசியபொற்சுண்ணமும், ஆராய்தற்கரிய வாசனையும் நீரிற்கலந்து தெளித்து நல்ல முத்துக்களையும், மலரையும் அறுகையும் அரிசியையுந் தூவினான். (வி - ம்.) ஆடகம் - பொன். கீழ்நிலம் - கீழிடம். பாடமை - பெருமையமைந்த. தோடு - இதழ். (19) | பொன்னரி மாலையும் போதிற் றொங்கலும் | | மின்னகு பன்மணி விராய கோவையும் | | துன்னிய கனிகளுந் துலங்கு மாடியும் | | என்னவு மணிபெற வெங்குந் தூக்கினான். |
(இ - ள்.) பொன்னாலரிந்து செய்யப்பெற்ற மாலையும், பூக்களாலாய மாலையும், ஒளி விளங்குகின்ற பலமணிகள் கலந்து செய்யப் பெற்ற மாலையும் விளங்குகின்ற கண்ணாடியுமாகிய எவையும் அலங்காரம்பெறச் செய்தான். (வி - ம்.) போது - பூ. தொங்கல் - மாலை. கோவை - மாலை. (20) | தோரண மெங்கணுந் தொடரிப் பல்கொடி | | காரண விசும்பெலாங் கஞற்றிப் பாலிகை | | பூரண கும்பங்கள் பொலிந்த வேதிகை | | ஏரண வியவிளக் கினமு மீட்டினான். |
(இ - ள்.) மாவிலையாலாகிய தோரணங்களை எவ்விடத்தும் தொடுத்துப் பலவகைப்பட்ட நிறங்களையுடைய கொடிகளை மேகத்தை யண்ம ஆகாயத்தி னிடமெல்லாம் நெருங்கக்கட்டி, முளைப்பாலிகையும், நிறைகுடங்களும் பொலிவுபெற்ற பூசைமேடையினிடத்து அழகு பொருந்திய தீபங்களையும் சேர்த்தினான். |